விஜய் டிவியில் பிரபலமாக ஒளிபரப்பாகும் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் தொடர்ந்து சில வாரங்களாக பல கவலைகள், சண்டைகள் என ஓடிக்கொண்டிருந்தது. தனம் எப்பொழுது வீட்டில் உள்ளவர்களிடம் கர்ப்பத்தை பற்றிய உண்மைகளை சொல்ல போகிறார் என ஆவலுடன் காத்திருந்தனர். இந்த எபிசோடில் மூர்த்தி குடும்பத்தாருடன் விஷத்தை சொல்லிவிடுகிறார்.
பாண்டியன் ஸ்டோர்ஸ்
பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் தனம் கர்ப்பமாக இருந்ததை அடுத்து பல பிரச்சனைகள் ஏற்பட்டது. தனம் அதனை வெளியில் சொல்லாமல் இருக்க மீனா அதனை தவறாக புரிந்துகொள்ள இப்படி பல சண்டை சச்சரவுகள் நிகழ்ந்தது. மேலும் மக்கள் மத்தியிலும் இப்படி சண்டையாக போய்க்கொண்டுள்ளதே என்ற வருத்தமும் இருந்து வந்தது. இந்நிலையில் ஜீவா வீட்டில் உள்ள யாரிடமும் சொல்லாமல் சென்று விட்டார்.
ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!
இதனால் அவர் எங்கே போனார் என்ற கவலையும் அனைவர்க்கும் இருக்க மீனா புலம்பிக்கொண்டே இருந்தார். ஜீவாவும் வந்து விட தன்னை பார்க்க வரவில்லையே என்றும் கோவத்தில் இருந்தார் மீனா. நேற்று வீட்டிற்கு வந்த ஜீவா தங்களுக்கு என் மேல் அக்கறையே இல்லை என்று சொல்ல மூர்த்தி கோவத்தில் உங்க அண்ணி இதனை வருஷத்தில் என்னைக்காவது முடியாம படுத்து இருக்காளா?? கொஞ்ச நாளா இவளுக்கு உடம்பும் சரியில்லை.
அன்னைக்கு உனக்காக மீனா வீட்டிற்கு பேச போனப்போ என்ன நடந்துச்சு தெரியுமா?? என நடந்த அனைத்தையும் கூறுகிறார். உங்க அண்ணி அம்மாவாக போறா. என்று சொல்ல ஒட்டுமொத்த குடும்பமும் சந்தோஷமடைகிறது. ஜீவாவின் அம்மாவும் தனத்திற்கு ஆசிர்வாதம் செய்கிறார்.
தனம் வெக்கப்பட்டு ஓட மூர்த்தியும் பின்னாடியே போல அதனை பார்த்த தம்பிகளும் பின்னாடி போக ஒரே சந்தோசத்தின் உச்சகட்டமாக சீரியல் ஒளிபரப்பானது. அடுத்ததாக முல்லை கண்ணாவிடம் மீனாவின் வீட்டிற்கு சென்று இந்த விஷயத்தை சொல்லி கூட்டிட்டு வா என்று சொல்ல கண்ணனும் வேகமாக செல்கிறார். மீனாவின் வீட்டிற்குள் சென்று மீனா அண்ணி என்று கத்த அங்கு ஜனார்த்தனன் திறந்த வீட்டுக்குள்ள நாய் நுழையுற மாதிரி வர என்று அசிங்கப்படுத்துகிறார்.
ஆனால் கண்ணன் அதனை கண்டுக்கொள்ளவே இல்லை. அண்ணி என்று சத்தமாக அழைக்க மீனாவும் வந்து விடுகிறார். மீனாவை அங்கு அனுப்ப முடியாது என்று சொல்ல முக்கியமான விஷயம் சொல்லணும் என்று கண்ணன் சொல்ல அவரை பேசவே விடவில்லை. ஜீவா எங்களை மதிக்கவே இல்லை.
எங்கள் மீது பாசமும் இல்லை என்று மீனா அழுக கண்ணன், கயல் மாதிரியே நம் வீட்டில் ஒரு குட்டி குழந்தை வர போகிறது என்று சொல்ல மீனாவிற்கு அதிர்ச்சியாகிறது. தனம் கர்ப்பமாக இருக்கும் விஷயத்தை சொன்னதும் மீனா சந்தோஷமடைகிறார். வீட்டிற்கு வர சம்மதமும் தெரிவிக்கிறார். இது ஜனார்தனனுக்கு சுத்தமாகவே பிடிக்கவும் இல்லை. இதோடு எபிசோடு முடிவடைகிறது.