தனம் கர்ப்பமாக இருக்கும் விஷயம் தெரிந்ததும் மன்னிப்பு கேட்கும் மீனா – கண்கலங்கிய பாண்டியன் ஸ்டோர்ஸ் குடும்பம்!!

0

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் தனம் கர்ப்பமான விஷயத்தை கேள்விப்பட்டு வீட்டில் உள்ள அனைவரும் சந்தோஷமடைகின்றனர். கண்ணனும் மீனாவிடம் உண்மையை சொல்வதற்காக செல்ல உண்மை தெரிந்ததும் மீனா வீட்டிற்கு கிளம்புகிறார்.

பாண்டியன் ஸ்டோர்ஸ்

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் இதனை நாட்கள் சண்டை பிரச்னையை மட்டுமே காட்டிக்கொண்டிருந்தனர். எப்பொழுது தனம் உண்மையை சொல்லப்போகிறார் என்று பலரும் காத்திருந்தனர். ஜீவா யாருக்கும் சொல்லாமல் வீட்டை விட்டு சென்றதை அடுத்து பல பிரச்சனைகள் ஏற்பட்டது.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

ஜீவா வீடு திரும்பியதும் நடந்த பிரச்சனையில் மூர்த்தி அனைத்து உண்மைகளையும் சொல்லிவிடுகிறார். நேற்றைய எபிசோடு முழுக்க சந்தோஷமும் கும்மாளமுமாகவே இருந்தது. கண்ணனும் மீனாவை அழைக்க வீட்டிற்கு செல்ல மீனா விஷயத்தை கேள்விப்பட்டு சந்தோஷமடைகிறார்.

தான் இத்தனை நாள் செய்த தவறு மீனாவிற்கு தெரியவருகிறது. மீனா கிளம்புவதை பார்த்த ஜனார்த்தனன் போக விடாமல் தடுக்கிறார். ஆனால் மீனா அதனை காதில் கூட வாங்கவில்லை. கண்ணனுடன் வண்டியில் போக நடந்தவற்றை நினைத்து வேதனைப்படுகிறார்.

‘நான் சென்னை சென்றதும் ரஜினியை சந்தித்து ஆதரவு கேட்பேன்’ – கமல்ஹாசன் பேட்டி!!

அக்காவை இப்படி தப்பா நினைவித்துட்டோமே என்று தன்னை தானே திட்டியும் கொள்கிறார். குழந்தையை கண்ணனிடம் விட்டுவிட்டு மீனாவே வண்டியை ஓட்டுகிறார். இப்பொழுது தனம் வீட்டிற்கு கஸ்தூரி வர தனம் கர்ப்பமாக இருக்கும் விஷயத்தை சொன்னவுடன் தலைகால் புரியவில்லை அவருக்கு.

இதனை இப்பொழுது அத்தையிடம் சொல்ல வேண்டும் என்று குதிக்கிறார். நேரில் சொல்லி அவர்களின் சந்தோஷத்தையும் பார்க்க வேண்டும் என்றும் கூறுகிறார். முல்லையும் கஸ்தூரியும் வீட்டிற்கு செல்ல எதுவும் சொல்லாமல் தனத்தின் அம்மாவை அழைத்து வருகின்றனர்.

மீனாவும் வீட்டிற்கு வந்துவிட தனத்திடம் மன்னிப்பு கேட்கிறார். இனிமேல் உங்களை நான் தான் பாத்துக்க போறேன் என்றும் சொல்லுகிறார். ஒட்டுமொத்த குடும்பமும் இத்தனை நாள் ஏற்பட்ட கவலைகள் தீர்ந்தது என்று மகிழ்ச்சியடைகின்றனர். மேலும் மீனாவும் இத்தனை நாள் தான் நடந்துகொண்டதற்கும் மன்னிப்பு கேட்கிறார். இதோடு எபிசோடும் முடிவடைகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here