விஜய் டிவியில் பிரபலமாக ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் நிகழ்ச்சியில் தற்போது போட்டியாளர்களின் வீட்டில் இருந்து வர ஆரம்பித்துள்ளனர். நேற்று ஷிவானி அம்மா மற்றும் பாலாஜியின் சகோதரரும் வந்திருந்தனர். இன்றைய எபிசோடில் ரம்யா வீட்டில் இருந்தும், ரம்யா வீட்டில் இருந்தும் வந்துள்ளனர். அழுகையுடன் கலந்த மகிழ்ச்சியாகவே இன்றைய இன்றைய பிக் பாஸ் காட்சியளிக்கிறது.
பிக் பாஸ்
இந்த சீசனில் இத்தனை நாட்கள் ஒளிபரப்பான பிக் பாஸ் நிகழ்ச்சியில் நேற்று தான் சுவாரஸ்யமாகவே காணப்பட்டது. ஃபிரீஸ் டாஸ்க் வைக்கும்போதே போட்டியாளர்கள் வீட்டில் இருந்து வரப்போகிறார்கள் என்பது தெரிந்தது. நேற்று ஷிவானியின் அம்மா வந்தது அனைவரையும் கண்கலங்க வைத்தது.
சரி பாசமாக எதாவது பேசுவார் என்று பார்த்தால் ஷிவானியை விழித்து வாங்கிவிட்டார். எப்போ பாரு பாலாஜி பின்னாடியே சுத்துற, இதுக்கு தான் உன்னை அனுப்புனேனா?? என்று கண்டபடி பேச ஆரம்பித்து விட்டார். இதனை கேட்டு ஷிவானிக்கு மட்டுமல்ல இந்த எபிசோடை பார்த்த அனைவர்க்கும் பெரிய ஷாக்.
இப்படி பேசாதீங்க அம்மா என்று ஷிவானி கதற அவரின் அம்மா விடுவதாக இல்லை. உன்னை பார்க்கும்போதே கடுப்பா வருது. எதோ ஜோடி நம்பர் ஒன் மாதிரி அவன் பின்னாடியே சுத்துற. என்று கண்டபடி பேசிவிட்டார். இனி அடுத்தடுத்து என்ன நடக்க போகிறதோ என்று மக்களும் பீதியில் தான் உள்ளனர்.
ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!
இந்நிலையில் தற்போது அவர் வெளியிட்ட ப்ரோமோவில் ரம்யாவின் வீட்டில் இருந்து அவரின் அம்மாவும் தம்பியும் வந்துள்ளனர். ரம்யா எப்போதுமே அழ மாட்டாள் என்று சொல்ல ஆரி மத்தவங்களை தான் அழ வைப்பாங்க என்று கவுண்டரும் கொடுத்தார். அடுத்த ப்ரோமோவில் ரியோவின் மனைவி ஸ்ருதி வருகிறார்.
அங்கு பெரிய பாச போராட்டமே நடந்து விட்டது. ரியோ ஸ்ருதியை கட்டிப்பிடித்து அழுக அனைவரையும் கண்கலங்க வைத்தது. அதன் பிறகு ஸ்ருதி வழக்கம் போல ரம்யாவை நீ தூக்கிட்டு போனியமே என்று வம்புக்கு இழுக்க அந்த இடமே கலகலப்பானது.