இன்று ஒரு வித மனஅழுத்தத்தில் ஜீவா, மூர்த்தியிடம் மீனா தன்னிடம் ஒரு பாத்ரூம் கட்டி தர சொல்லி கேட்டதாக சொல்கிறார். அவர் அப்படி பேசியது மூர்த்திக்கு கவலை அளித்தாலும் உடனடியாக ஜீவாவின் அறையில் ஒரு பாத்ரூம் கட்ட ஏற்பாடு செய்கிறார். அதே போல் தனம் குடும்பத்தில் அடுத்தடுத்து வரும் பிரச்சனைகள் காரணமாக தான் கர்ப்பமாக இருக்கும் விஷயத்தை மூர்த்தியிடம் சொல்ல முடியாமல் தவிக்கிறார்.
“மனதில் இருந்தததை கொட்டும் ஜீவா”
விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் “பாண்டியன் ஸ்டோர்ஸ்” சீரியலில் இன்று மூர்த்தி ஜீவாவிற்கு கால் செய்கிறார். மீனா மற்றும் குழந்தை இல்லாத சோகத்தில் இருந்த ஜீவா அவரிடம் மீனா தன்னிடம் ஒரு பாத்ரூம் தான் கட்டி தர சொல்லி கேட்டதாகவும், அதனை கூட தான் அவளுக்கு செய்யவில்லையே என்று புலம்புகிறார்.
ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!
இதனால் மூர்த்தி மற்றும் தனம் இருவரும் அதிர்ச்சி அடைகின்றனர். மூர்த்தி தனத்திடம் இவன் இதனை நம்மிடம் முதலிலேயே சொல்லி இருக்கலாம் என்று வேதனை அடைகிறார்.
இதற்கிடையில், தனம் தான் கர்ப்பமான விஷயத்தை மூர்த்தியிடம் தான் முதலில் சொல்ல வேண்டும் என்று நினைக்கிறார். ஆனால், அடுத்தடுத்து வரும் குடும்ப பிரச்சனைகளால் மூர்த்தியிடம் சொல்ல முடியாமல் தவிக்கிறார். மூர்த்தி ஜீவாவை நினைத்து வருத்தமடைந்து முடிவாக பாத்ரூம் கட்ட கதிரிடம் ஏற்பாடு செய்ய சொல்கிறார்.
கல்யாணத்தை தடுத்து நிறுத்த போராடும் அகிலன் – தாலி கட்டுவாரா பாரதி??
ஆனால், இதற்கும் மூர்த்தியின் அம்மா அவளுக்காக இதனை செய்ய வேண்டிய அவசியம் என்ன என்றும் அவளுக்கு அவள் அப்பா வீட்டிற்கு போக ஒரு காரணம் வேண்டும் அவ்வளவு தான் என்று கூறுகிறார். ஆனால், இதனை மூர்த்தி காதில் வாங்கிகொள்ளவில்லை. இதனை அடுத்து ஜீவா கதிரிடம் குழந்தை மற்றும் மீனாவை நினைத்து புலம்புகிறார்.
நேரில் சென்று குழந்தை மற்றும் மீனாவை பார்க்க கதிர் வலியுறுத்துகிறார். தனம் தான் கர்ப்பமான விஷயத்தை ஒவ்வொரு முறையும் சொல்ல வந்து, முடியாமல் போக தவிக்கிறார். தனம் எப்போது மூர்த்தியிடம் தான் கர்ப்பமான விஷயத்தை சொல்ல போகிறார்? என்று ரசிகர்கள் ஆர்வமாக உள்ளனர்.