EMI தொகைக்கான வட்டிக்கு வட்டி ரத்து – மத்திய அரசுக்கு ரூ.6 லட்சம் கோடி இழப்பு!!

0
இந்தியாவில் அனைத்து ஊரடங்கு கட்டுப்பாடுகளும் வாபஸ்?? மத்திய உள்துறை அமைச்சகம் அதிரடி!!
இந்தியாவில் அனைத்து ஊரடங்கு கட்டுப்பாடுகளும் வாபஸ்?? மத்திய உள்துறை அமைச்சகம் அதிரடி!!

கொரோனா நோய்த்தொற்று பரவல் காரணமாக பொது முடக்கம் அமல்படுத்தப்பட்டது. அதனால், தொழில் நிறுவனங்கள் மூடப்பட்டன. பலர் வேலையிழந்தனர். அதை கருத்தில் கொண்டு தனிநபர்கள், தொழில் நிறுவனங்கள் பெற்ற கடன்களுக்கான தவணைகளை செலுத்துவதற்கு கடந்த மார்ச் மாதம் 1ம் தேதி முதல் கடந்த ஆகஸ்ட் மாதம் 31ம் தேதி வரை 6 மாதங்களுக்கு கால அவகாசம் அளிப்பதாக, இந்திய ரிசர்வ் வாங்கி (ஆர்பிஐ) அறிவித்தது.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

ஆனால், கடன் தேவைகள் ஒத்தி வைக்கப்பட்ட நிலையில் 6 மாத காலத்திற்கு வங்கிகள் வட்டி விதித்தன. மத்திய அரசு, ஊரடங்கால் பாதிக்கப்பட்ட அனைத்து துறைகளுக்கும் ஊக்கச் சலுகை திட்டங்களை அமல்படுத்தியுள்ளது.

குறு, சிறு, நடுத்தர நிறுவனங்கள், ஓட்டல் உள்ளிட்ட, 27 துறைகளுக்கு, அவசர கடன் உதவி திட்டத்தின் கீழ், உத்தரவாதமில்லா கடன் வழங்க, மூன்று லட்சம் கோடி ரூபாய் ஒதுக்கியுள்ளது. இந்தாண்டு மார்ச் – ஆகஸ்ட் வரையிலான ஆறு மாதங்களுக்கு, இரண்டு கோடி ரூபாய் வரையிலான அனைத்து கடன்களுக்கான வட்டிக்கு வட்டியை ஏற்பதாக மத்திய அரசு அறிவித்துள்ளது.

உலகின் சக்திவாய்ந்த 100 பெண்கள் பட்டியல்!!

அவ்வாறு வட்டிகள் தள்ளுபடி செய்தால், ஆறு லட்சம் கோடி ரூபாய் இழப்பு ஏற்படும். வங்கிகளின் சொத்து மதிப்பு, 50 சதவீதம் குறைந்து, அவற்றின் செயல்பாடு பெரிதும் பாதிக்கப்படும். இது, வங்கியில் டிபாசிட் செய்துள்ள, மூத்த குடிமக்கள், ஓய்வூதியதாரர்கள் உள்ளிட்ட அனைவரையும் பாதிக்கும். இதனை மத்திய அரசு ஏற்றால் ரூ.6 லட்சம் கோடி இழப்பு ஏற்படும் எனவும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here