‘பாண்டியன் ஸ்டோர்ஸை அழிச்சிட்டு நீங்க நல்லாவே இருக்க மாட்டீங்க’ – ஜனார்தனனை வெளுத்து வாங்கும் மீனா!!

0

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் “பாண்டியன் ஸ்டோர்ஸ்” சீரியலில் இன்று கதிரின் வித்தியாசமான நடத்தையால் ஜீவா சந்தேகம் அடைகிறார். அதே போல் மீனா மற்றும் ஜனார்தனுக்கு இடையே சண்டை வந்து விடுகிறது.

“பாண்டியன் ஸ்டோர்ஸ்” சீரியல்

இன்று “பாண்டியன் ஸ்டோர்ஸ்” சீரியலில் கண்ணனிடம் காஸ்திரி அத்தாச்சி வீட்டிற்கு சென்று ஒரு பொருளை கொண்டு போய் கொடுக்க சொல்கிறார், முல்லை. இதனால் கண்ணன் ஐஸ்வர்யாவை பார்க்கும் மகிழ்ச்சியில் சரி என்று கூறி விடுகிறார். கண்ணனின் மகிழ்ச்சியினை கண்டு முல்லைக்கு சந்தேகம் வருகின்றது. சரியாக பொருளை கொண்டு போய் கஸ்தூரி அத்தாச்சியிடம் சேர்த்து விடுவியா? என்று கேள்வி கேட்கிறார்.

உடல் எடையை ஒட்டுமொத்தமாக குறைந்த அஜித் பட நடிகை – வைரலாகும் புகைப்படம்!!

இதனால் கடுப்பாகும் கண்ணன், கோபம் அடைகிறார். இதனை அடுத்து முல்லை அவரை சமாதானம் செய்கிறார். பின், அங்கு செல்லும் கண்ணன் ஐஸ்வர்யா இல்லாமல் சோர்வு அடைகிறார். இதற்கு பின்பாக, கதிர் கடையில் இருக்கும் போது முல்லை போன் செய்கிறார். படிக்க வேண்டும் என்று முல்லை கதிரை அறிவுறுத்துகிறார்.

கதிர் இங்கே எப்படி படிக்க முடியும் என்று கேட்கும் போது முல்லை அதெல்லாம் படிக்கலாம் என்று கூறுகிறார். இங்கு படிக்க முடியாது என்றும் அண்ணன் இருப்பதாகவும் கூறுகிறார். இதனால் அங்கு வேலை பார்க்கும் ஜீவா சந்தேகம் அடைகிறார். அது குறித்து கதிரிடமும் கேட்கிறார்.

கதிர் மழுப்பி மழுப்பி பதில் கூறுவதால் ஜீவாவிற்கு மேலும் சந்தேகம் அடைகிறார். இப்படியாக இருக்க, மீனா தந்து அப்பாவின் கடைக்கு சென்று வேலை பார்க்கிறார். அவரது அப்பா கடையில் பல இலவச பொருட்கள் கொடுப்பதால் அது குறித்து மீனா கண்டிக்கிறார்.

ஆனால், அவரோ மக்கள் இலவசம் வழங்கும் கடையை தான் எப்போதும் நாடி வருவர் என்று தெரிவிக்கிறார். அதே போல் ஜீவாவை இந்த கடைக்கு முதலாளி ஆக்க வேண்டும் என்பது தான் தனது ஆசை என்றும் தெரிவிக்கிறார். இதனால் மீனா மிகவும் கோபம் அடைந்து விடுகிறார். நாங்கள் இங்கே வந்து விட்டாலும் கூட, மற்றவர்களின் நிலை என்ன என்று கேட்கிறார்.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

அதற்கு ஜனார்த்தனன் கூலாக அவர்கள் எப்படி போனால் நமக்கு என்ன என்று கூறுகிறார். இதனால் உச்சகட்ட கோபம் அடையும் மீனா இனி இந்த கடைக்கு வர மாட்டேன் என்றும் ஜீவா உங்களை பற்றி கூறியது சரி தான் என்று கூறி விட்டு சென்று விடுகிறார். இத்துடன் இன்றைய எபிசொட் முடிவடைந்து விடுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here