மீண்டும் தொடங்கிய பாண்டியன் ஸ்டோர்ஸ் ஷூட்டிங்?? படுகுஷியில் இல்லத்தரசிகள்!!

0

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் தற்போது பழைய எபிசோடுகள் ஒளிபரப்பான நிலையில் மீண்டும் ஷூட்டிங் தொடங்கப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகி வருகிறது. மேலும் ஷூட்டிங் புகைப்படங்களும் இணையத்தில் வைரலாகி வருகிறது.

பாண்டியன் ஸ்டோர்ஸ்

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் தொடர்ந்து பல விறுவிறுப்பான கட்டங்கள் நடந்துகொண்டிருந்தது. இதில் லாக்டவுன் காரணமாக ஷூட்டிங் அனைத்தும் நிறுத்தப்பட்டது. இதனால் மக்களுக்கு பலரும் வருத்தத்தில் இருந்தனர். வீட்டில் வேலை இல்லாமல் முடங்கி கிடப்பவர்களுக்கு இந்த சீரியல்கள் தான் பெரும் பொழுதுபோக்காக இருந்தது.

ஆனால் தற்போது பழைய எபிசோடுகள் அனைத்தும் மீண்டும் போடப்படுவதால் மக்கள் பலரும் பொழுதும் போகாமல் அவதிப்பட்டு வந்தனர். இந்நிலையில் தான் ஏற்கனவே பாரதி கண்ணம்மா ஷூட்டிங் ஒரு ரிசார்ட்டில் நடைபெற்று வருகிறது. அதுவும் ராஜா ராணி சீரியல் இணைந்து மெகா சங்கமமாக ஒளிபரப்பாகி வருகிறது.

இப்படி இருக்க தற்போது பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் ஷூட்டிங் மீண்டும் தொடங்கி இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. அதாவது இந்த ஷூட்டிங் ஹைதராபாத்தில் நடக்க இருப்பதாக ஏற்கனவே ஸ் எய்திகள் வெளிவந்தது. இந்நிலையில் தற்போது ஷூட்டிங்கில் இருக்கும் புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது. இதனால் பழையபடி ஷூட்டிங் ஆரம்பித்து விட்டதாக இல்லத்தரசிகள் குஷியில் உள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here