11 ஆம் வகுப்பு நுழைவுத் தேர்வு ரத்து… பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு !!!

0

கொரோனா சூழலில் பல்வேறு துறைகள் முடங்கி இருக்கும் நிலையில் மாணவர்களின் ஏதிர்காலமும் கேள்விக்குறியாகி உள்ளது. அதே நேரம் மாணவர்களின் நலனிலும் அக்கறை காட்டி வருகிறது அரசு. சமீபத்தில் தான் தமிழக அரசு உட்பட பல்வேறு மாநிலங்களும் தங்கள் மாநில 12-ம் வகுப்பு பொதுத்தேர்வை ரத்து செய்து உள்ளது. இந்நிலையில் தான் 11ஆம் வகுப்பில் மாணவர்களுக்கு நடத்தப்பட இருந்த சிறு நுழைவுத் தேர்வையும் ரத்து செய்து தமிழக அரசு அரசாணையை வெளியிட்டு உள்ளது.

ENEWZ  WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

11ஆம் வகுப்பில் தெரிவு செய்கிற  பிரிவின்  மூலம் தான் கல்லூரியில் நமது எதிர்காலம் அமையும். எனவே மாணவர்களுக்கு இந்த பிரிவை  தேர்வு செய்வது முக்கிய மூலமாக அமைகிறது. இது வரை இந்த தேர்வானது 10-ம் வகுப்பு மதிப்பெண் அடிப்படையில் நடைபெற்றது. தற்போது உள்ள சூழலில் இது சாத்தியமற்றது. மேலும் 11-ம் வகுப்பு சேர்க்கைக்கு குறிப்பிட்ட பிரிவுக்கு நிறைய மாணவர்கள் விண்ணப்பித்து உள்ளனர். இதனால் மாணவர்கள் சேர விரும்பும் பிரிவு குறித்த கொள்குறி முறையில் சிறு நுழைவுத் தேர்வு நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில், அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் அனுமதிக்கப்பட்ட இடங்களுக்கு அதிகமாக  மாணவர் சேர்க்கை தேவைப்படும் நிலையில், அந்த ஒவ்வொரு பிரிவிலும் 10 முதல் 15 வரையிலான அதிக மாணவர்களை சேர்த்துக் கொள்ளலாம் என்றும், அதிகப்படியான விண்ணப்பங்கள் வரும் பிரிவுக்கு 9ஆம் வகுப்பு மதிப்பெண்ணை அடிப்படையாகக் கொண்டு மாணவர்களுக்கு பிரிவுகளை ஒதுக்கலாம் என்று கூறப்பட்டுள்ளது. மேலும் 10 ஆம் வகுப்பு பாடத்தின் அடிப்படையில் நுழைவுத் தேர்வு எதுவும் நடத்த தேவையில்லை என்றும் பள்ளிக்கல்வித்துறை கூறியுள்ளது.

Facebook   => Like செய்ய கிளிக் பண்ணுங்க!!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here