பாண்டியன் ஸ்டோர்ஸில் குழந்தையுடன் இணைவாரா மீனா?? எதிர்பார்ப்பில் ரசிகர்கள்!!

0
meena
meena

விஜய் டிவியில் பரபரப்பாக ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கும் சீரியலில் பாண்டியன் ஸ்டோர்ஸ் முக்கியமான ஒன்று. தற்போது மீனாவிற்கு குழந்தை பிறந்துள்ளதால் மீனாவின் அப்பா அவர்களை தன் வீட்டிற்கு அழைத்து சென்றுள்ளார். ஜீவாவும் அவரது தாயாரும் குழந்தையை பார்க்க செல்ல அந்த குழந்தையை பார்க்க விடாமல் நர்ஸ் தடுக்கிறார்.  இதனால் கவலையுடன் வீடு திரும்புகின்றனர்.

பாண்டியன் ஸ்டோர்ஸ்

கூட்டுக் குடும்ப கதையை மையமாக கொண்டு எடுக்கப்பட்டதால் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்ற பாண்டியன் ஸ்டோர்ஸ் தற்போது அதிரடி திருப்பங்களுடன் ஒளிபரப்பாகி வருகிறது. மூத்த அண்ணன் பொறுப்பில் இருக்கும் குடும்பம், அண்ணியின் பாசம், கதிர் – முல்லை ரொமான்ஸ், கடைக்குட்டியின் சேட்டைகள் என சீரியல் கலகலப்பாக போய்க்கொண்டுள்ளது.

pandian stores
pandian stores

உடனுக்குடன் அப்டேட்களை பெற Enewz சமூக வலைதள பக்கங்களில் இணையுங்கள்!!

லாக்டவுனுக்கு பிறகு பல புது முகங்களையும் பாண்டியன் ஸ்டோர்ஸ் அறிமுகப்படுத்தியது. கர்ப்பமாக இருந்த மீனாவிற்கு தற்போது பெண் குழந்தை பிறந்துள்ளது. மேலும் அவரின் நிஜ வாழ்க்கையிலும் ஆண் குழந்தை பிறந்துள்ளது. ஆனாலும் பிரேக் எடுக்காமல் வீடியோ கால் மூலம் ஷூட்டிங்கில் கலந்து கொண்டுள்ளார் மீனா.

pandian store
pandian store

இதனை தனது இன்ஸ்டாவிலும் குறிப்பிட்டிருந்தார். இந்நிலையில் கொரோனா காரணமாக மருத்துவமனையில் குழந்தையை பார்க்க முடியாமல் போகிறது. மேலும் மீனா மற்றும் குழந்தையை அவரது அப்பா ஜீவா குடும்பத்திற்கு தெரியாமல் டிஸ்சார்ஜ் செய்து அழைத்து செல்கிறார்.

pandian stores

குழந்தையை பார்க்க வேண்டும் என்ற ஆசையில் ஜீவாவும் அவரது தாயாரும் மீனாவின் அப்பா வீட்டிற்கு வருகின்றனர். அப்பொழுது மீனாவை பராமரிப்பதற்காக வைத்திருந்த நர்ஸ் அவர்களை பார்க்க விடாமல் வெளியேற்றுகிறார். இதனால் ஏமாற்றம் அடைந்த ஜீவாவும் அவரது அம்மாவும் வீடு திரும்புகின்றனர்.

pandian stores meena
pandian stores meena

இதற்கிடையில் மீனாவின் அப்பா மீனாவையும் பேத்தியையும் இங்கு இருந்து அனுப்பவே கூடாது என்று திட்டம் தீட்டுகிறார். வீட்டிற்கு சென்ற ஜீவா மீனாவிற்கு வீடியோ கால் செய்கிறார். மீனாவும் வீடியோ காலில் குழந்தையை காட்டுகிறார். இதனால் ஒட்டுமொத்த குடும்பமும் சந்தோஷமடைகிறது.

pandian stores
pandian stores

மேலும் கதிர் தனது நண்பனின் காதலை சேர்த்து வைக்க ரிஸ்க் எடுத்து வருகிறார். இதனால் அவரின் நண்பர்கள் மூலம் சிக்கல் ஏற்பட்டுள்ளது. மேலும் மீனாவிற்கு நல்ல படியாக குழந்தை பிறந்தால் குலதெய்வம் கோவிலுக்கு சென்று பொங்கல் வைக்கிறேன் என்று வேண்டி கொண்டுள்ளனர் ஜீவா குடும்பத்தினர். இதில் மீனா தனது பாப்பாவுடன் கலந்து கொள்வாரா?? என்பதை வரும் எபிசோடுகளில் பொறுத்திருந்து பார்ப்போம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here