ஜனார்தனனை தொடர்ந்து பிரச்சனையை கிளப்பும் பார்வதி.., அதிர்ச்சியில் கதிர்.., லேட்டஸ்ட் பாண்டியன் ஸ்டோர்ஸ்!!

0
ஜனார்தனனை தொடர்ந்து பிரச்சனையை கிளப்பும் பார்வதி.., அதிர்ச்சியில் கதிர்.., லேட்டஸ்ட் பாண்டியன் ஸ்டோர்ஸ்!!
ஜனார்தனனை தொடர்ந்து பிரச்சனையை கிளப்பும் பார்வதி.., அதிர்ச்சியில் கதிர்.., லேட்டஸ்ட் பாண்டியன் ஸ்டோர்ஸ்!!

மூர்த்தி குடும்பத்தில் ஜனார்த்தனை தொடர்ந்து இப்போது பார்வதியும் புது பிரச்சனையை கொண்டு வருகிறார்.

பாண்டியன் ஸ்டோர்ஸ்

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் இப்போது விறுவிறுப்பாக நகர்ந்து கொண்டிருக்கிறது. இந்த சீரியலில் நேற்றைய எபிசோடில் மீனா கஷ்டப்படுவதை பார்த்து ஜனார்த்தனன் என்னுடன் வந்து விடு என கூப்பிடுகிறார். ஆனால் மீனா உங்களால தான் எனக்கு எல்லா பிரச்சனையும். நான் என்ன கஷ்டம் வந்தாலும் என் குடும்பத்தோட தான் இருப்பேன் என மூஞ்சில அடிச்ச மாதிரி சொல்லிவிடுகிறார். இப்படி இருக்கையில் இப்போது புதிய ப்ரோமோ ஒன்று வெளியாகி உள்ளது.

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

அதாவது பாண்டியன் ஸ்டோர்ஸ் குடும்பம் முழுவதும் இப்போது புது வீடு கட்டுவதற்கான வேலைகளை தொடங்கி விட்டனர். அப்போது கதிர் போட்டியில் ஜெயிச்ச 10 லட்சம் பணத்தை மூர்த்தியிடம் கொடுக்கிறார். கொடுக்கும்போது இந்த 5 லட்சம் முல்லையின் ஹாஸ்பிடல் செலவுக்கான பணம் என்றும், மீதமுள்ள 5 லட்சம் பாண்டியன், கயலுக்கான பணம் என்று கொடுக்கிறார். முதலில் வாங்க மறுக்கும் மூர்த்தி பின்னர் அந்த பணத்தை வாங்கிக் கொள்கிறார்.

பின் மொத்த குடும்பம் முழுவதும் வெளியே கிளம்புகின்றனர் . அப்போது பார்வதி என் பொண்ணு வீட்ல எல்லாரும் இருந்துக்கிட்டு ஆடம்பரமா வெளியே கிளம்புறீங்க. ஆனால் என் மக மட்டும் வெறும் கழுத்தோட இருக்கணுமா? என சண்டை போடுகிறார். இதற்கு கதிர் பதில் எதுவும் பேச முடியாமல் அமைதியாக இருக்கிறார். இத்துடன் இந்த ப்ரோமோ முடிவுக்கு வருகிறது. இதை வைத்து பார்க்கும்போது அடுத்து வரும் எபிசோடுகளில் பாண்டியன் ஸ்டோர்ஸ் குடும்பத்தை எப்படியாவது பிரிக்க வேண்டும் என பார்வதி தொடர்ந்து ஏதாவது சொல்லிக் கொண்டே இருப்பார் என்று தான் தெரிகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here