“பாண்டியன் ஸ்டோர்ஸ்” சீரியல் மூலமாக பிரபலமான குமரன் தற்போது அந்த சீரியலில் புதிதாக முல்லை வேடத்தில் நடிக்கும் காவியவுடன் ஒரு புகைப்படத்தினை பதிவிட்டுள்ளார். இந்த புகைப்படம் தற்போது ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பினை பெற்று வைரலாகி வருகின்றது.
பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல்
கடந்த சில வருடங்களுக்கு முன்பு பிரபல தொலைக்காட்சியான விஜய் டிவியில் “பாண்டியன் ஸ்டோர்ஸ்” சீரியல் ஒளிபரப்பாக ஆரம்பித்தது. நாம் மறந்து போன கூட்டு குடும்ப வாழ்கை கதையினை அழகாக இந்த நாடகத்தில் படம் பிடித்து காட்டுவர்.
இதன் காரணமாக இந்த சீரியலுக்கு என்று தனி ரசிகர்கள் கூட்டம் இருந்து வந்தது. அதிலும் குறிப்பாக இந்த சீரியலில் வரும் கதிர் மற்றும் முல்லை ஜோடி அனைவருக்கும் மிகவும் பிடித்தமான ஒன்றாக இருந்து வந்தது.
14 வது ஐபிஎல் தொடர் – மீண்டும் ஸ்பான்சர் ஆகும் விவோ!!
நன்றாக போய் கொண்டு இருந்த இந்த சீரியலில் யாரும் எதிர்பாராத விதமாக முல்லை கதாபாத்திரத்தில் நடித்த விஜே சித்ரா தற்கொலை செய்து கொண்டார். இதனால் இந்த சீரியல் ரசிகர்கள் மிகவும் கவலை மற்றும் அதிர்ச்சி அடைந்தனர். முல்லை கதாபாத்திரத்தில் வேறு ஒருவரை நடிக்க வைக்க வேண்டும் என்ற நிர்பந்தம் இருந்ததால் அந்த கதாபாத்திரத்தில் விஜய் டிவியின் சீரியல் நடிகையான காவியா என்பவரை நடிக்க வைத்தனர். ஆரம்பத்தில் அவரை ஏற்று கொள்ள மறுத்த ரசிகர்கள் ஒரு வழியாக தற்போது அவரை முல்லை கதாபாத்திரத்தில் ஏற்று கொண்டனர்.
ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!
தற்போது “பாண்டியன் ஸ்டோர்ஸ்” மற்றும் “பாக்கியலட்சுமி” தொடர்களின் மெகா சங்கமம் நடைபெற்று வருகின்றது. இந்த சங்கமம் கொஞ்சம் மொக்கையாக இருப்பதாக ரசிகர்கள் தங்களது கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். இது ஒரு பக்கம் இருக்க தற்போது “பாண்டியன் ஸ்டோர்ஸ்” சீரியலின் கதிர் – முல்லையாக நடிக்கும் குமரன் மற்றும் காவியா இருவரும் இணைத்து ஒரு செல்பி எடுத்து சமூகவலைத்தளத்தில் பதிவிட்டு உள்ளனர். இதனை வரவேற்ற ரசிகர்கள் அந்த புகைப்படத்திற்கு லைக்குகளை கொடுத்து வருகின்றனர்.