பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் இருந்து குமரன் விலகுகிறாரா?? அவரே வெளியிட்ட பதிவு!!

0
சீரியல்ல தான் குழந்தை இல்லை., நிஜத்துல இவ்ளோ அழகான மகன் இருக்கா! குமரனின் குடும்ப போட்டோ!!

விஜய் தொலைக்கட்சியில் ஒளிபரப்பாகும் “பாண்டியன் ஸ்டோர்ஸ்” சீரியலில் கதிர் கதாபாத்திரத்தில் நடிக்கும் குமரன் அந்த சீரியலில் இருந்து விலக போவதாக செய்திகள் கசிந்த வண்ணம் இருக்கின்றன. இதனை அடுத்து அது குறித்து குமரன் தற்போது பேசி உள்ளார்.

“பாண்டியன் ஸ்டோர்ஸ்” சீரியல்

விஜய் டிவியில் டாப் ரேட்டிங்கில் ஒளிபரப்பாகும் சீரியல் தான், “பாண்டியன் ஸ்டோர்ஸ்” சீரியல் தான். இந்த சீரியலில் கூட்டு குடும்பத்தின் எதார்தத்தினை மிகவும் அழகாக எடுத்து காட்டி இருப்பர். இதன் காரணாமாகவே இந்த சீரியலை பலருக்கும் பிடிக்கும் என்று கூறலாம். இந்த சீரியலில் மக்கள் மனதினை கவர்ந்த ஜோடி என்றால், அது கதிர் மற்றும் முல்லை ஜோடி தான். இந்த கதாபாத்திரத்தில் நடிகர் குமரன் மற்றும் மறைந்த நடிகை சித்ரா நடித்து வந்தனர்.

‘மே 1,2 தேதியில் முழு ஊரடங்கு இல்லை’ – உயர் நீதிமன்றம் விளக்கம்!!

இவர்களுக்கு என்று தனி ரசிகர் கூட்டம் உருவானது. இப்படியான சுழலில் தான் நடிகை சித்ரா சில குடும்ப பிரச்சனை காரணமாக இவர் தற்கொலை செய்து கொண்டார். இதனால் ரசிகர்கள் மிகவும் அதிர்ச்சி அடைந்தனர். அவரது மறைவிற்கு பின்பாக, நடிகை காவியா முல்லை கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். சித்ரா மரணம் அடைந்த போது குமரன் அந்த சீரியலில் இருந்து விலகி விடுவார் என்று ரசிகர்கள் மத்தியில் பேசப்பட்டது. பின், இந்த செய்தி பொய் என்று குமரன் தரப்பில் இருந்து கூறப்பட்டது. இப்படியாக இருக்க, மீண்டும் இவர் அந்த சீரியலில் இருந்து விலக போகிறார் என்ற தகவல் இணையத்தில் கசிந்தது.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

இது குறித்து குமரன் கூறியதாவது அவரது ரசிகர்கள் சிலர் இந்த ஆண்டு நடைபெற்ற விஜய் டெலிவிஷன் அவார்ட்ஸில் குமரனுக்கு ஒரு விருது கூட வழங்கவில்லை என்று ஆதங்கப்பட்டுள்ளனர். அதற்கு குமரன் தான் சரியாய் நடித்ததாகவும், விருது கிடைத்தால் என்ன, கிடைக்காவிட்டால் என்ன அது குறித்து பேச வேண்டாம் என்று ரசிகர்களை கேட்டுக்கொண்டுள்ளார். இதனை தவறாக புரிந்து கொண்ட சிலர் தான், இவ்வாறாக தவறான வதந்தியை பரப்பி வருகின்றனர் என்று தெரிவித்து விட்டார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here