பாண்டியன் ஸ்டோர்ஸ் பிளாஷ் பேக் – மூர்த்தியை பிடிக்காமல் கல்யாணம் ஆனவனுடன் ஓடிப்போகும் மல்லி!!

0

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் தற்போது 10 வருடங்களுக்கு முன்பு பயணித்து வருகிறது. அவர்கள் ஆளான கதை தற்போது தொடங்கியுள்ளது. இதில் மல்லி எதற்காக ஓடி போனார் என்பது குறித்து வெளியாகியுள்ளது.

பாண்டியன் ஸ்டோர்ஸ்

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் தற்போது தொடர்ந்து பல விறுவிறுப்பான சம்பவங்கள் நடந்து வருகிறது. இத்தனை நாட்கள் நாம் முல்லை ஒரே பெண் என நாம் நினைத்து கொண்டிருக்க ஆனால் அவருக்கு என்ற அக்கா இருப்பது பலருக்கும் ஷாக். நேற்றைய எபிசோடில் மல்லி புகைப்படத்தை பார்த்ததும் மூர்த்திக்கு பழைய நினைவுகள் எல்லாம் வருகிறது.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

அதன்படி தற்போது பிளாஷ் பேக் சீன் ஆரம்பித்துள்ளது. மூர்த்தியின் அம்மா லட்சுமிக்கு கண்ணன் சிறு வயதாக இருக்கும் போதே கைகால் விளங்காமல் போய் விடுகிறது. மூர்த்திதான் தம்பிகளை குளிப்பாட்டுவது சமைத்து தருவது ஸ்கூலுக்கு அழைத்து செல்வது என அனைத்து வேலைகளையும் பார்த்து கொண்டுள்ளார். அவருக்கு அல்லியை கட்டி வைக்கலாம் என அனைவரும் முடிவு செய்துள்ளனர்.

ஆனால் அல்லிக்கு இது சுத்தமாக பிடிக்கவும் இல்லை. மூர்த்தி குடும்பம் மிகவும் கஷ்டத்தில் இருப்பதால் தானும் அந்த குடும்பத்தில் சென்று கஷ்டப்படுவதா?? என்று தன் அம்மாவிடம் சென்று புலம்புகிறார். அடுத்ததாக இரவில் ஒருவரை வரவழைக்கிறார் அல்லி. அதுதான் அல்லியின் காதலன். இருவரும் பேசிக்கொண்டுள்ளனர்.

“குக் வித் கோமாளி” கனியின் ‘பால் பூரி’ ரெசிபி – செஞ்சு தான் பாருங்களேன்!!

அப்பொழுது தான் தெரிகிறது அவருக்கு கல்யாணம் ஆகி 7 வயதில் குழந்தை இருப்பது. இது ரசிகர்களுக்கு பெரிய ஷாக். மூர்த்தியையா இவர் இவ்வளவு கேவலமாக பேசிவிட்டு கல்யாணம் ஆனவனை காதலிக்கிறார் என்று ரசிகர்கள் அதிர்ச்சியில் உள்ளனர். அதன் பிறகு தான் திருமண நிச்சயத்தில் அவர் ஓடி போய் திருமணம் செய்து கொள்ள தனம் மூர்த்தியை திருமணம்’ செய்து கொள்கிறார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here