தமிழகத்தில் கொரோனா பரவல் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் மே 1, 2 தேதி முழு ஊரடங்கு போட பரிசீலித்த நிலையில் உயர் நீதிமன்றம் தற்போது அதற்கான அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.
கொரோனா ஊரடங்கு
இந்தியா முழுவதும் தற்போது கொரோனா தொற்று பரவி வரும் நிலையில் நாள் ஒன்றுக்கு 3 லட்சம் வரை பாதிப்படைந்து வருகின்றனர். மேலும் உயிரிழப்பும் ஆயிரத்தை கடந்து வருகிறது. இதற்கான தடுப்பூசிகளும் மக்களுக்கு செலுத்தப்பட்டு வருகிறது. மேலும் சில மாநிலங்களில் கொரோனா வேகமெடுத்து வருகிறது. பல மாநில அரசுகள் இந்த கொரோனாவை தடுக்க போராடி வருகின்றனர். ஆனாலும் இந்த இரண்டாவது அலை கட்டுக்குள் வந்த பாடில்லை.
ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!
அப்படி இருக்க பல மாநிலங்களில் முழு ஊரடங்கு போடப்பட்டு வருகிறது. தமிழகத்தில் ஞாயிற்று கிழமைகளில் முழு ஊரடங்கு போடப்பட்டு வருகிறது. இந்நிலையில் மே 1 மற்றும் 2 வாக்கு எண்ணிக்கை காரணமாக முழு ஊரடங்கு போட வேண்டும் என சென்னை உயர் நீதிமன்றம் தமிழக அரசுக்கு பரிந்துரை செய்திருந்தது. மே 1 தான் 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்த வேண்டிய நாள்.
சிவக்குமார் மடியில் விஜய், சூர்யா – அப்போவே என்ன ஒரு நட்பு! புல்லரித்து போன ரசிகர்கள்!!
அதனால் தலைமை செயலாளர் ஆளுநரிடம் இதனை பற்றி ஆலோசித்திருந்தார். இந்நிலையில் தற்போது உயர்நீதி மன்றம் மே 1 மற்றும் 2 தேதிகளில் ஊரடங்கு போட தேவையில்லை என்று கூறியுள்ளது. அதாவது ஏற்கனவே மே 1 உழைப்பாளர்கள் தினத்தால் அரசு விடுமுறை. அதனால் மக்கள் யாவரும் வெளியே வரப்போவதில்லை. மேலும் 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தி கொள்வதால் அவர்கள் கட்டாயம் வெளியில் வரவேண்டி இருக்கும் என்றும் கூறி மே 1,2 தேதிகளில் முழு ஊரடங்கு தேவையில்லை என உயர்நீதிமன்றம் கூறியுள்ளது.