பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் கதிர் முல்லையை அழைத்து சென்று கடையை காட்டுகிறார். புதிய தொழிலுக்கு இடம் சரியாக அமைந்து விட்டதால் முல்லை சந்தோஷமடைகிறார். இடத்தின் ஓனர் மூர்த்தியின் தம்பி என்பதால் அட்வான்ஸ் பணத்தை சற்று குறைத்து கொள்கிறார்.
கதிர் முல்லை தன் வாழ்க்கையில் அடுத்த படிக்கு முன்னேறி விட்டனர். அடுத்ததாக சூப்பர் மார்க்கெட்டில் பெரிய கூத்தே நடக்கிறது. அதாவது மீனா வேலை செய்ய முடியாமல் கட்டப்பட்டு கொண்டுள்ளார். அப்பொழுது கண்ணன் அங்கு வந்து நக்கலாக சிரிக்க மீனா எரிச்சலடைகிறார்.
பிறகு கண்ணன் அட்ரஸே எழுதாம ஆர்டர் வாங்கி இருக்கீங்க எங்க போய் டெலிவரி பண்றது என்று கேட்கிறார். அதற்கு மீனா தான் மறந்து விட்டதாக சொல்ல ஜீவா வந்து திட்டுகிறார். அதன் பிறகு மீனா பொருளை எல்லாம் அடுக்கி வைக்க செல்ல அப்பொழுது ஜனார்த்தனன் உள்ளே வருகிறார்.
மீனா கஷ்டப்படுவதை பார்த்து வருத்தப்படுகிறார். ஏன்மா உனக்கு இந்த தேவை இல்லாத வேலை, பேசாம நம்ம கடைக்கு வா, வீட்டுல 10 நாள் தங்கிட்டு போ என்று சொல்கிறார். அதற்கு மீனா இதெல்லாம் நடக்குற காரியமா?? என்று சொல்கிறார். நீ எதுக்கு இப்படி கஷ்டப்படணும் என்று சொல்ல அதோடு எபிசோடும் முடிவடைகிறது.
வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்
டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்
உடனடி செய்திகளுக்கு – எங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்
ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்
டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்
இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்
யு டியூப் : Enewz Tamil யுடியூப்
Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்
Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்