ஜீவாவை வீட்டோடு மாப்பிள்ளையாக்க சதி செய்யும் ஜனார்த்தனன் – பாண்டியன் ஸ்டோர்ஸ் குடும்பத்தின் நிலை??

0

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் தற்போது பிரபலமாக ஒளிபரப்பாகி வருகிறது. தற்போது மீனா தனது அத்தையின் சுயரூபத்தை தெரிந்துகொள்ள வீட்டை விட்டு அனுப்புகிறார். இதனால் கடுப்பாகும் ஜனார்த்தனன் மீனாவை எப்படியாவது பிரித்து கொண்டு வர வேண்டும் என்று திட்டமிடுகிறார்.

பாண்டியன் ஸ்டோர்ஸ்

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் மீனாவை பார்த்துக்கொள்ள ஜனார்த்தனன் தனது தங்கை ராசாத்தியை அனுப்பி வைத்தார். மேலும் மீனாவை அந்த வீட்டில் இருந்து பிரிப்பதற்காகவும் அனுப்பி வைத்தார். ஒவ்வொருவரிடமும் வம்பிழுத்து அதனை மீனாவிடம் வேறு விதமாக கூறி வந்தார்.

இதனால் குடும்பத்தில் நிறைய பிரச்சனைகள் ஏற்பட்டது. கண்ணனையே அழவைத்து விட்டார் ராசாத்தி. மூர்த்தியும் என்ன செய்வது என்று குழம்பி போய் தான் இருந்தார். அப்பொழுது தான் மீனாவிற்கு தனது அத்தை செய்யும் காரியங்கள் தெரிய வருகிறது. இதனால் கோவமும் அடைகிறார்.

தனது அப்பாவிற்கு கால் செய்து வர சொல்லி ராசாத்தியை அழைத்து போக சொல்லுகிறார். இதனால் ஜனார்த்தனன் கோவமடைகிறார். இதெல்லாம் நல்ல இல்லை மீனா அவமானப்படுத்துறியா?? என்று கத்தி விட்டு செல்கிறார் ஜனார்த்தனன். வீட்டிற்கு வந்து ராசாத்தி ஜனார்தனனிடம் மீனாவிற்கு மருந்து வைத்து மயக்கி விட்டனர் என்றும் சொல்லுகிறார்.

ஜனார்த்தனன் அந்த குடும்பத்தில் இருந்து மீனாவை எப்படி பிரித்து அழைத்து வருவது என்று திட்டம் போடுகிறார். மேலும் மீனாவும் முல்லையும் கஷ்டப்பட்டு துவைத்துக்கொண்டுள்ளனர். அதனை பார்த்த மூர்த்தி வாஷிங் மெஷின் வாங்க திட்டமிடுகிறார். அடுத்து ஜனார்த்தனன் டிபார்ட்மென்டல் ஸ்டோர்ஸ் கட்டிக்கொண்டிருக்க அதற்குள் ஜீவாவை எப்படி வீட்டோடு மாப்பிள்ளையாக ஆக்குவது என்று யோசிக்கிறார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here