தமிழகத்தில் கலவரத்தை ஏற்படுத்த சசிகலா மற்றும் தினகரன் முயற்சிப்பதாகவும், மனித வெடிகுண்டாக மாறுவோம் என மிரட்டல் விடுத்துள்ளதாகவும் சட்டத்துறை அமைச்சர் சிவி சண்முகம் பேட்டியளித்துள்ளார்.
அமைச்சர் சிவி சண்முகம்
தமிழகத்தின் சட்டத்துறை அமைச்சர் சிவி சண்முகம், தமிழகத்தில் சசிகலா கலவரத்தை ஏற்படுத்த முயற்சிப்பதாக கூறி, புகார் ஒன்றை சென்னை டிஜிபி திரிபாதியிடம் கொடுத்துள்ளார். தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அவர், ‘உச்சநீதிமன்ற தீர்ப்பை அவமதிக்கும் வகையில் சசிகலா அதிமுக கொடியை பயன்படுத்துகிறார். தொடர்ந்து தமிழகத்தின் அமைதியை சீர்குலைக்கும் வகையில் தினகரன் மற்றும் சசிகலா இருவரும் சதி திட்டம் தீட்டிக்கொண்டிருக்கிறார்கள். மேலும் 100 பேர் மனித வெடிகுண்டாக மாறுவோம் என தினகரன் கூறுகிறார். பொதுமக்களின் உடமைக்கும் உயிருக்கும் ஆபத்து விளைவிக்கும் வகையில் இருவரும் சதித்திட்டம் போட்டுள்ளனர்’ என பேட்டியளித்தார்.
‘சர்ச்சைக்குரிய கருத்துக்களை பகிர்ந்தால் பாஸ்போர்ட் கிடையாது’ – உத்தரகண்ட் காவல்துறை அறிவிப்பு!!
ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!
தொடர்ந்து அவர் கூறுகையில், ‘அதிமுகவினர் யார், இரட்டை இலை யாருக்கு, என தேர்தல் ஆணையம் தெரிவித்துவிட்டது. நான்கு ஆண்டு சிறையிலிருந்த சசிகலா, இப்போது வந்து அதிமுகவிற்கு உரிமை கொண்டாடுவதா? உண்மையான அதிமுக அரசு முதல்வர் பழனிச்சாமி மற்றும் பன்னீர் செல்வம் ஆகியோரின் தலைமையில் தான் செயல்பட்டு வருகிறது. மேலும் டிஜிபி, முப்படைகளிடம் மனு கொடுத்தாலும் எங்களை ஒன்றும் செய்ய முடியாது’ என தினகரன் கூறியதாகவும் அமைச்சர் சண்முகம் தெரிவித்தார். சசிகலா சென்னை திரும்பி வருவதில் எங்களுக்கு எந்த ஆட்சேபனையும் இல்லை எனவும் கூறினார்.