மண்டபத்தில் கண்ணாலேயே பேசிக்கொள்ளும் கண்ணன் ஐஸ்வர்யாவை பார்த்து கடுப்பாகும் பிரஷாந்த் – நடக்க இருக்கும் விபரீதம் என்ன??

0

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் தற்போது தனத்தின் வளைகாப்பு விழா கோலாகலமாக நடந்து கொண்டிருக்க தற்போது ஐஸ்வர்யா கண்ணன் செய்யும் அட்டகாசத்தை பார்த்து பிரஷாந்த் கோவமடைகிறார்.

பாண்டியன் ஸ்டோர்ஸ்

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் ஒரே விழாக்கோலமாக கொண்டாடி வருகின்றனர். நீண்ட வருடங்களுக்கு பிறகு தனம் கர்ப்பமாக இருக்க ஊரே அசரும் படி கொண்டாட வேண்டும் என முடிவெடுக்கின்றனர் தனத்தின் குடும்பத்தினர். இதனால் அனைத்து விஷயங்களையும் பார்த்து பார்த்து செய்கின்றனர்.

மூர்த்தி தனம் ஆரம்பத்தில் நகை போட்டு வந்ததாகவும், இப்பொழுது அதெல்லாம் இல்லை எனவும் சொல்லி வருத்தப்படுகிறார். எப்படியாவது தனத்திற்கு நகை வாங்கி தர வேண்டும் என்று ஆசைப்படுகிறார்.

ஆனால் அது நடக்காமல் போக தம்பிகள் அனைவரும் இணைந்து தனத்திற்கு சர்ப்ரைஸ் செய்ய வேண்டும் என்று நினைக்கின்றனர். அண்ணன் வாங்கி நினைத்த நகையை வாங்க செல்கிறார் ஜீவா. அதனை மூர்த்தியிடம் காட்டுகின்றனர். இதனால் மூர்த்தி சந்தோஷமடைகிறார்.

தனம் மூர்த்தி தான் தனக்காக இந்த அளவிற்கு செய்திருக்கிறார் என்று நினைத்து சந்தோஷமடைகிறார். அதன் பின் கண்ணனும் ஐஸ்வர்யாவும் மண்டபத்தில் ரொமான்ஸ் சீனை ஆரம்பித்து விட்டனர். ஐஸ்வர்யா கண்ணாலேயே பேச அதற்கு அதற்கு கண்ணனும் பதில் சொல்கிறார்.

இடையில் பிரஷாந்த் இருப்பதையே இருவரும் மறந்து விட்டனர். பிரஷாந்த் ஏற்கனவே ஐஸ்வர்யா தன்னிடம் பேசாதத்தை நினைத்து கோவத்தில் உள்ளார். பிரஷாந்த் கண்ணனை முறைத்தும் இருவரின் ரொமான்ஸ் நின்ற பாடில்லை. அடுத்ததாக செஃப் தாமு வேறு வருகிறார். தனத்திற்கு சமைத்து கொடுத்து அசத்துகிறார். இதோடு எபிசோடு முடிவடைகிறது.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here