பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் தற்போது கண்ணன் அனைத்து வேலைகளையும் முடித்து விட்டு வர ஐஸ்வர்யா, லட்சுமி இறந்த விஷத்தை சொல்ல கதறி அழுகுறார்.
பாண்டியன் ஸ்டோர்ஸ்
லட்சுமிக்கு அனைத்து சடங்குகளையும் வீட்டில் உள்ளவர்கள் செய்து முடிக்கின்றனர். இதற்கு மேல் இறந்த உடலை வைத்திருக்க கூடாது என்று அக்கம்பக்கத்தினர் சொல்கின்றனர். ஆனால் தனம், கதிர், முல்லை, கண்ணன் வரும் வரை காத்திருக்கலாம் என்று சொல்கின்றனர்.
அப்பொழுது ஊர் தலைவர் லட்சுமியை எடுத்த பிறகு தான் கோவில் நடையை சாத்த முடியும் என்று சொல்கிறார். இதனால் வேறு வழியில்லாமல் லட்சுமி உடலை அடக்கம் செய்ய எடுத்து செல்கின்றனர். தனத்தால் இதனை தாங்கி கொள்ள முடியவில்லை. மீனா முல்லை இருவரும் கதறி அழுக லட்சுமியை தூக்கி செல்கின்றனர்.
அப்பொழுது பார்த்து கண்ணன் லோடு வேலைகளை முடித்து விட்டு வருகிறார். நேராக கடைக்கு வருகிறார். கடை பூட்டி இருப்பதை பார்த்து குழப்பமடைகிறார். சரி வீட்டிற்கு செல்லலாம் என்று நடக்க அங்கு லட்சுமிக்கு கண்ணீர் அஞ்சலி போஸ்டர் ஒட்டி இருப்பதை பார்த்து பதறுகிறார்.
யார் இப்படி ஒரு காரியத்தை பண்ணது சும்மாவே விட மாட்டேன் என்று சொல்கிறார். ஐஸ்வர்யா அழுது கொண்டிருப்பதை பார்த்து கண்ணன் என்ன என்று கேட்கிறார். எங்க மாமா போன என்று கதறுகிறார் ஐஸ்வர்யா. அம்மாவிற்கு யாரோ இப்படி போஸ்டர் ஒட்டி இருக்காங்க என்று சொல்கிறார்.
இதனை அண்ணனிடம் சொல்ல வேண்டும் என்று கிளம்ப இனி அத்தையை நம்மளால பார்க்கவே முடியாது என்று சொல்கிறார் ஐஸ்வர்யா. அத்தை இறந்து விட்டதாக சொல்கிறார். அப்பொழுது இருவர் அந்த பக்கம் வர அம்மாவிற்கு இந்நேரம் கொள்ளியே வச்சு இருப்பாங்க என்று சொல்கின்றனர். இதனால் தலையை பிடித்து கொண்டு அழுகிறார். இதோடு எபிசோடும் முடிவடைகிறது.
ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்
டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்
இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்
யு டியூப் : Enewz Tamil யுடியூப்
டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்
வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்