ஐ.பி.எல் தொடரில் கேப்டன் பதவியை உதறி தள்ளிய கோலி – ரசிகர்கள் அதிர்ச்சி!

0

நடப்பு ஐபிஎல் தொடருடன் பெங்களூரு அணியின் கிரிக்கெட் கேப்டன் பதவியில் இருந்து விலகுவதாக விராட் அறிவித்திருப்பது அவரது ரசிகர்களை வருத்தத்தில் ஆழ்த்தியுள்ளது.

பதவி விலகல்:

நேற்று  தொடங்கிய ஐபிஎல் திருவிழாவில் மும்பை இந்தியன் அணியும், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் பலப்பரீட்சை நடத்தியது.  இந்த தொடர் ஐக்கிய அரபு அமீரகத்தில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளுடன் தொடங்கி நடந்து வருகிறது. இதில் 50 சதவீதம் பார்வையாளர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டது.  இதனால், பல நாட்களாக தொடரை நேரில் பார்க்காத ரசிகர்களுக்கு இது சிறப்பு விருந்தாக அமைந்தது.

இந்த பலப்பரிட்சையில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வெற்றி வாகை சூடியது. இதனால், கேப்டன் தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியினர் மகிழ்ச்சி வெள்ளத்தில் ஆழ்ந்தனர்.  கேப்டன் தோனி ரசிகர்களும் இதை  மிக சிறந்த வெற்றியாக கருதினர்.  இந்நிலையில், இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலி பரபரப்பு அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அதாவது, உலகின் முன்னணி பேட்ஸ்மேன்களில் ஒருவராக விளங்கும் விராட் டி-20 உலகக் கோப்பை தொடருக்கு பிறகு, டி20 அணியின் கேப்டன் பொறுப்பில் இருந்து விலக போவதாக அறிவித்து இருந்தார்.  இந்த நிலையில், நேற்று திடீரென பெங்களூரு அணி கேப்டன் பதவியிலிருந்து விலகுவதாகவும், கேப்டன் பொறுப்பில் இருந்து விலகினாலும் தொடர்ந்து அந்த அணிக்காக ஆடுவேன் என்றும்  அவர் தெரிவித்தார். இவரின் இந்த அறிவிப்பு ஒட்டுமொத்த ரசிகர்களையும் கவலையில் ஆழ்த்தியுள்ளது.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here