பாரதி கண்ணம்மா சீரியலில் கண்ணம்மா தூக்கத்தில் இருந்து எந்திரிக்காமல் இருக்க இதனை பார்த்து பயந்து போன லட்சுமி வெண்பாவிற்கு கால் செய்கிறார்.
பாரதி கண்ணம்மா
பாரதி கண்ணம்மாவில் சௌந்தர்யாவிற்கு அம்மா பிள்ளையை பிரித்து விட்டோமோ என்ற குற்ற உணர்ச்சி ஏற்படுகிறது. இதனை வேணுவிடம் சொல்லி புலம்புகிறார். இது கண்ணம்மாவையும் பாரதியை சேர்த்து வைப்பதற்காக எடுத்த முடிவு இதில் ஒன்றும் தவறு இல்லை என்று ஆறுதல் சொல்கிறார் வேணு.
ஆனாலும் சௌந்தர்யாவால் இதனை ஏற்று கொள்ள முடியவில்லை. கண்ணம்மாவிற்கு இந்த இரட்டை குழந்தை விஷயத்தை யார் சொல்லி இருப்பார் என்று யோசிக்கின்றனர். ஒரு வேளை துளசி சொல்லி இருக்க அதிக வாய்ப்பு இருப்பதாக வேணு நினைக்க சௌந்தர்யா அப்படி இருக்காது என்று அடித்து கூறுகிறார்.
அடுத்ததாக வெண்பா போனை பார்த்து பல சமையல் ரெசிபிக்களை பார்த்து கொண்டுள்ளார். சாந்தி வந்து என்ன விஷயம் என்று கேட்க பாரதி வீட்டில் நடந்த விஷயத்தை சொல்கிறார். பாரதியும் நானும் ஒன்றாக சமைத்தோம் என்றும் இதனால் தினமும் பாரதிக்கு சமைத்து கொடுக்க போவதாகவும் சொல்கிறார்.
கண்ணம்மா வழக்கத்திற்கு மாறாக தூங்கி கொண்டிருக்க அதனை பார்த்து லட்சுமி கண்ணம்மாவை எழுப்புகிறார். கண்ணம்மா எந்திரிக்காமல் இருக்க பதட்டத்தில் பாரதிக்கு கால் செய்கிறார். ஆனால் பாரதி எடுக்காததால் வெண்பாவிற்கு கால் செய்ய இதுதான் சாக்கு என்று விஷ ஊசியை எடுத்து வருகிறார்.
கண்ணம்மாவை செக் செய்து விட்டு வழக்கம் போல ஊசியை போட செல்கிறார். அப்பொழுது பார்த்து கண்ணம்மா கண் முழித்து விடுகிறார். வெண்பா இருப்பதை பார்த்து பதறுகிறார். லட்சுமி வெண்பாவை காபி குடிக்க சொல்கிறார். மேலும் பால் பாக்கெட் வாங்க கடைக்கு செல்கிறார்.
அப்பொழுது வெண்பா பாவம் லட்சுமி தனியா இருந்து கஷ்டப்படுறா அவளுக்கு தங்கச்சி இருந்தா எவ்வளவு சந்தோசமா இருக்கும் என்று சொல்கிறார். இதனை கேட்டு கண்ணம்மா உண்மையை சொல்லும்படி கெஞ்சுகிறார். ஆனால் வெண்பா கண்ணம்மாவின் கெஞ்சலை பார்த்து சந்தோசப்படுகிறார். இதோடு எபிசோடும் முடிவடைகிறது.
ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்
டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்
இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்
யு டியூப் : Enewz Tamil யுடியூப்
டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்
வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்