வெற்றிகரமாக ஆண் குழந்தையை பெற்றெடுக்கும் தனம் – சந்தோசத்தின் உச்சத்தில் பாண்டியன் ஸ்டோர்ஸ் குடும்பம்!!

0

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் தற்போது தனத்திற்கு பிரசவ வலி வந்து மருத்துவமனையில் அனுமதிக்கின்றனர். மேலும் அவருக்கு ஆண் குழந்தை பிறக்கிறது.

பாண்டியன் ஸ்டோர்ஸ்

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் தற்போது வீட்டில் இத்தனை நாட்கள் கலவரத்திற்கு பின்பு நல்ல விஷயம் இன்றைய எபிசோடில் அரங்கேறியுள்ளது. அதாவது கண்ணன் கல்லூரிக்கு கிளம்பி கொண்டுள்ளார். மூர்த்தி வீட்டில் தனமும் அவரது அம்மாவும் மட்டுமே உள்ளனர். அப்பொழுது தனத்திற்கு பிரசவ வலி ஏற்படுகிறது.

இதனால் துடித்து போகும் அவரது அம்மாவிற்கு வேர்த்து கொட்டுகிறது. அதன் பிறகு தனம் நடித்ததாக சொல்லி அவரை கிண்டல் செய்கிறார். அடுத்த 10வது நிமிடம் நிஜத்திலேயே தனத்திற்கு பிரசவ வலி வருகிறது. இதனால் தனத்தின் அம்மா மூர்த்திக்கு கால் செய்ய அவர் எடுக்கவே இல்லை.

மேலும் வெளியில் வந்து உதவி கேட்க அப்பொழுது கண்ணன் நின்று கொண்டிருக்க தனம் கத்தும் சத்தத்தை கேட்டு ஓடி வருகிறார். தெரு வரைக்கும் சென்று ஆட்டோவை அழைத்து வருகிறார். எப்படியோ மருத்துவமனைக்கு அழைத்து செல்கின்றனர்.

வீட்டிற்கு அனைவருமே வர ஐஸ்வர்யா நடந்த விஷயத்தை சொன்னதும் அனைவரும் மருத்துவமனைக்கு வேகமாக வருகின்றனர். கண்ணன் கதிருக்கு கால் செய்து சொல்ல அவர் பதறி அடித்து கொண்டு தனத்தை பார்க்க வருகிறார்.

அதன் பிறகு ஜீவா மற்றும் மீனா கிளம்பி வருகின்றனர். அதன் பிறகு குடும்பத்தில் உள்ள அனைவரும் ஒவ்வொருவராக மருத்துவமனைக்கு வந்து விடுகின்றனர். தனம் வலி தாங்க முடியாமல் தவிக்க கடைசியில் ஆண் குழந்தை பிறந்து விடுகிறது. இதனால் ஒட்டுமொத்த குடும்பமும் சநதோஷமாகிறது.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப் 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here