விஜய் டிவியில் பிரபலமாக ஒளிபரப்பாகி வரும் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் தற்போது தனம் தெரியாமல் கீழே விழுந்து மயக்கமடைகிறார். மேலும் இன்றைய எபிசோடில் ஜீவாவை கல்லாவில் உட்கார வைக்க ஜனார்த்தனன் புதிதாக ஒரு திட்டத்தை போடுகிறார்.
பாண்டியன் ஸ்டோர்ஸ்
பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் பரபரப்பான பல கட்டங்கள் ஒளிபரப்பாகி வருகிறது. தனம் கீழே விழுந்ததால் குடும்பமே பதட்ட நிலைமையில் உள்ளது. என்ன நடக்குமோ என்ற பயத்திலேயே உள்ளனர். இன்றைய எபிசோடில் டாக்டர் வந்து தனத்திற்கு ஒன்றும் இல்லை.
ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!
சரியாகி விடுவார் என்று சொன்னதும் தான் மூர்த்தி நிம்மதியடைந்தார். அங்கு மீனா குடும்பத்தில் இருந்து யாரும் இன்னும் வரவில்லையே என்ற கோவத்தில் நின்றுகொண்டுள்ளார். மூர்த்தி ஜீவாவை அந்த விழாவிற்கு போகும்படி அனுப்பி வைக்கிறார்.
வெள்ளி குடமும் வாங்கி வைக்க அதனை ஜீவா எடுத்துக்கொண்டு செல்கிறார். இங்கு தனம் கண்முழிக்க அப்பொழுது தான் அனைவருக்குமே உயிர் வருகிறது. வீட்டில் அனைவரையும் பி[பற்றி விசாரிக்கிறார். அங்கு ஜனார்த்தனன் சூப்பர் மார்க்கெட் திறப்பு விழாவிற்கு செல்கிறார் ஜீவா.
மீனா ஏன் எவ்வளவு நேரம் என்று கோவித்துக்கொள்ள தனத்திற்கு நடந்தவற்றை சொல்கிறார். மீனாவும் மீனாவின் அம்மாவும் அதிர்ச்சியாகின்றனர். தனம் சரியானதை பற்றியும் சொல்கிறார். அடுத்ததாக ஜீவா உள்ளே செல்ல அனைத்தையும் சுற்றி காட்டுகின்றனர்.
தமிழகத்தில் அதிகரிக்கும் கொரோனா – மீண்டும் திறக்கப்பட்ட கட்டுப்பாடு அறைகள்!!
ஜீவாவை விடாப்பிடியாக கல்லாவில் உட்கார வைக்கிறார் ஜனார்த்தனன். இது ஜீவாவிற்கு சுத்தமாக பிடிக்கவும் இல்லை. இப்படி மாப்பிள்ளையை தன்னோடு வைத்து கொள்ள திட்டம் போடுகிறார் ஜனார்த்தனன். தனத்தை வீட்டிற்கு அழைத்து வருகின்றனர். வீட்டில் தனத்தை பார்த்ததும் லட்சுமி அழுகிறார். அனைவரும் சமாதானம் செய்கின்றனர்.