வருங்கால கணவருடன் முல்லை முதன்முதலாக எடுத்த போட்டோஷூட் – இணையத்தில் வைரல்!!

0
விஜே சித்ரா தற்கொலைக்கு முன் இதான் நடந்தது - ஓபன் டாக் கொடுத்த ஹேமந்த்! குழப்பத்தில் ரசிகர்கள்!!
விஜே சித்ரா தற்கொலைக்கு முன் இதான் நடந்தது - ஓபன் டாக் கொடுத்த ஹேமந்த்! குழப்பத்தில் ரசிகர்கள்!!

பிரபல சீரியலான பாண்டியன் ஸ்டோர்ஸ் நாயகி சித்ராவிற்கு கடந்த மாதத்தில் நிச்சயதார்த்தம் நடைபெற்றது. அந்த புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலானது. தற்போது முதன்முதலாக தனது வருங்கால கணவருடன் போட்டோஷூட் செய்து புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.

சித்ரா

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிரபல சீரியலான பாண்டியன் ஸ்டோர்ஸில் நடிப்பவர் சித்ரா. இவருக்கு ரசிகர் பட்டாளம் ஏராளம். ஆனால் இவருக்கு இந்த அளவிற்கு புகழ் எளிதாக கிடைத்து விடவில்லை.

chithra
chithra

நடுத்தர குடும்பத்தில் பிறந்த சித்ரா நடிப்பின் மீது உள்ள ஆசையால் கலைத்துறையில் நுழைந்தார். விஜய் டிவியில் மட்டுமல்ல பல சேனல்களில் இவர் நடித்துள்ளார். முதன்முதலாக சரவணன் மீனாட்சியில் நடித்ததன் மூலம் மக்கள் மனதில் இடம் பிடித்தார்.

chithra
chithra

அதன் பிறகும் அவருக்கு வாய்ப்புகள் குறைவாகவே கிடைத்தது. அடுத்ததாக அவர் கலர்ஸ் சேனலில் ஒரு சீரியலில் நாயகியாக நடித்தார். இவருக்கு சிலம்பம் கலையில் ஆர்வம் அதிகமாக இருந்தது. அதன்பிறகு சிறு சிறு வேடங்களில் நடித்து வந்தவர் சித்ரா.

chithra
chithra

தற்போது பாண்டியன் ஸ்டோர்ஸ் மூலமே இவருக்கு இவ்வளவு புகழ் கிடைத்தது. இவர் குடும்பத்திற்கு வீர மங்கை என்றே சொல்லலாம். ஏனெனில் தனியாளாக சம்பாதித்து அவரின் பெற்றோருக்கு சொந்த வீடு கட்டிக் கொடுத்துளார். இவரது ரசிகர்கள் பலர் அவருக்கு அவருக்கு தினமும் ஒரு பரிசு பொருளை அனுப்பி வந்தனர்.

chithra
chithra

இந்நிலையில் கடந்த மாதத்தில் அவருக்கு தொழிலதிபர் ஹேம்நாத் உடன் நிச்சயதார்த்தம் முடிவடைந்தது. இதனால் சித்ராவின் தீவிர ரசிகர்கள் பெரும் அதிர்ச்சி அடைந்தனர். அந்த புகைப்படமும் சமூக வலைதளங்களில் வைரலானது.

தற்போது முதன்முறையாக தனது வருங்கால கணவருடன் போட்டோஷூட் செய்து புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். இதனால் பலர் அவருக்கு வாழ்த்துக்கள் தெரிவித்த வண்ணம் உள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here