தமிழகத்தில் செப்டம்பர் 30ம் தேதியுடன் ஊரடங்கு உத்தரவு முடிவுக்கு வர உள்ள நிலையில் செப்டம்பர் 29ம் தேதி மருத்துவ நிபுணர் குழுவுடன் முதல்வர் எடப்பாடி பழனிசாமி அவர்கள் ஆலோசனை நடத்த உள்ளார். இதில் ஊரடங்கு உத்தரவினை நீட்டிப்பது மற்றும் தடுப்பு நடவடிக்கைகள் குறித்து ஆலோசிக்கப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
ஊரடங்கு நீட்டிப்பு??
கொரோனா பரவல் காரணமாக கடந்த மார்ச் 25ம் தேதி முதல் தமிழகத்தில் ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளது. ஆரம்பத்தில் ஊரடங்கு உத்தரவு கடுமையாக பின்பற்றப்பட்டது. இதனால் தொழில்துறைகள் முடங்கி பொதுமக்கள் வருமானம் இன்றி தவித்ததால் பல்வேறு தளர்வுகள் வழங்கப்பட்டன. இதுவரை 8 முறை ஊரடங்கு உத்தரவு நீட்டிக்கப்பட்டு உள்ளது. கடைசியாக ஊரடங்கு நீட்டிக்கப்பட்ட போதிலும் இ-பாஸ் ரத்து, ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு கிடையாது, பேருந்து, ரயில் பொதுப்போக்குவரத்திற்கு அனுமதி என பல்வேறு தளர்வுகள் வழங்கப்பட்டன.
ENEWZ – சமூக வலைதள பக்கங்களில் சேர கிளிக் பண்ணுங்க!!
இதனால் தமிழகத்தில் மெல்ல மெல்ல இயல்பு நிலை திரும்பி வருகிறது. ஆனால் மறுபுறம் நாளுக்கு நாள் கொரோனா தொற்று அதிகரித்தபடி உள்ளது. தினந்தோறும் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்களுக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டு வருகிறது. சுகாதாரத்துறை வெளியிட்ட அறிக்கையின் படி, இதுவரை 5,57,999 பேருக்கு கொரோனா உறுதியாகி உள்ள நிலையில் 9,010 பேர் உயிரிழந்து உள்ளனர். செப்டம்பர் 30ம் தேதியுடன் ஊரடங்கு உத்தரவு முடிவுக்கு வருகிறது.
அக். 1 முதல் பள்ளிகள் திறப்பு – தமிழக அரசு அறிவிப்பு!!
இதற்கிடையில் ஒவ்வொரு முறையும் ஊரடங்கு உத்தரவு நீட்டிப்பது மற்றும் தளர்வுகள் வழங்குவதில் மருத்துவ நிபுணர் குழுவின் பரிந்துரையின் அடிப்படையிலேயே தமிழக அரசு அறிவிப்புகளை வெளியிடுகிறது. இம்முறையும் செப்டம்பர் 29ம் தேதி முதல்வர் எடப்பாடி பழனிசாமி அவர்கள், மருத்துவக் குழுவுடன் தலைமைச் செயலகத்தில் காலை 10 மணிக்கு ஆலோசனை நடத்த உள்ளார். அதில் மேலும் சில தளர்வுகளுடன் ஊரடங்கை நீட்டிக்கலாமா? என்பது குறித்து விவாதிக்கப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.