இன்று “பாண்டியன் ஸ்டோர்ஸ்” மற்றும் “பாக்கியலட்சுமி” சீரியலின் மகா சங்கமத்தில் இன்று மூர்த்தி மற்றும் கோபிநாத் இருவருக்கும் சண்டை ஏற்பட்டு விடுகின்றது. அதே போல் மூர்த்தி கோபிநாத் பற்றியும் அவரது குடும்பம் பற்றியும் சரியாக சொல்லிவிடுவதால் கோபிநாத் ஆச்சிரியம் அடைகிறார்.
பாண்டியன் ஸ்டோர்ஸ் மற்றும் பாக்கியலட்சுமி சீரியல் சங்கமம்
விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் “பாண்டியன் ஸ்டோர்ஸ்” மற்றும் “பாக்கியலட்சுமி” சீரியலின் மகா சங்கமம் ஒளிபரப்பாகிறது. இன்று மூர்த்தி வண்டியில் செல்லும் போது போன் பேசி கொண்டு செல்கிறார். அவருக்கு பின் வரும் கோபிநாத் ஹார்ன் அடித்தும் மூர்த்தி வண்டியை தள்ளாமல் இருப்பதால் கோபிநாத் அவரை திட்டி விடுகிறார். இதனால் கோபம் அடையும் மூர்த்தி அவரிடம் சண்டையிடுகிறார்.
குரூப் 1 தேர்வர்களுக்கு முக்கிய அறிவிப்பு – டிஎன்பிஎஸ்சி வெளியீடு!!
இதனிடையே மூர்த்தி மற்றும் கோபிநாத் இருவரும் உறவினர்கள் என்று தெரிந்து விடுகிறது. அதன் பிறகு இருவரும் பரஸ்பரம் விசாரித்து கொள்கின்றனர். இது ஒரு பக்கம் இருக்க இனியா மற்றும் பாக்கியா மூர்த்தி வீட்டிற்கு வந்து விடுகின்றனர். அனைவரும் மகிழ்ச்சியாக பேசி கொள்கின்றனர். அதன் பிறகு பாக்கியா தனத்திற்கு குங்குமம் வழங்கி குழந்தை நன்றாக பிறக்க வேண்டும் என்று வாழ்த்துகிறார்.
Telegram Channel => Join செய்ய கிளிக் பண்ணுங்க!!
கோபிநாத் மீனாவின் தந்தையிடம் வேலை சம்பந்தமாக பேசி விட்டு வருகிறார். மூர்த்தி வீட்டிற்கு வரும் கோபிநாத் அங்கு இனியா மற்றும் பாக்கியவை பார்த்து ஆச்சிரியம் அடைகிறார். இத்துடன் இன்றைய எபிசொட் முடிந்து விடுகிறது.