தமிழக அரசின் இடைக்கால பட்ஜெட் தாக்கல் செய்யப்பட உள்ளது. இதனை துணை முதலமைச்சரும், நிதி அமைச்சரும் ஆன பன்னீர் செல்வம் தாக்கல் செய்யவுள்ளார்.
இடைக்கால பட்ஜெட்:
தமிழகத்தில் இன்னும் ஒரு சில மாதங்களில் சட்டமன்ற தேர்தல் நடைபெறவுள்ளது. இதற்கு முன்னதாகவே தமிழகத்தில் இடைக்கால பட்ஜெட் தாக்கல் செய்யப்படவுள்ளது. இதனை தமிழ்நாட்டின் துணை முதலமைச்சர் பன்னீர் செல்வம் தாக்கல் செய்யவுள்ளார். தற்போது விரைவில் தமிழகத்தில் தேர்தல் நடைபெறவுள்ளதால் இந்த இடைக்கால பட்ஜெட்டில் பல சிறப்பான திட்டங்கள் இடம்பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!
மேலும் இந்த பட்ஜெட் முழுமையான பட்ஜெட்டாக இருக்கலாம் என்று கூறப்படுகிறது. இதில் என்னென்ன திட்டங்கள் உள்ளது என்பது பற்றி ஆலோசிப்பதற்கு சில தினங்களுக்கு முன்பாக தமிழக முதல்வர் தலைமையில் சென்னை தலைமை செயலகத்தில் ஆலோசனை கூட்டம் நடந்தது.
#INDvsENG 2வது டெஸ்ட் – இந்திய அணி அபார வெற்றி!!
இந்த கூட்டத்தில் எடுக்கப்பட்டுள்ள முடிவுகளின் அடிப்படையில் தான் இந்த இடைக்கால பட்ஜெட் இருக்கும் என்று கூறுகின்றனர். இந்த இடைக்கால பட்ஜெட்டை தமிழக துணை முதலமைச்சரும், நிதி அமைச்சரும் ஆன ஓ.பன்னீர் செல்வம் வரும் 23ம் தேதி அன்று தாக்கல் செய்யவுள்ளார்.