#INDvsENG 2வது டெஸ்ட் – இந்திய அணி அபார வெற்றி!!

0

இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி அபார வெற்றியை பதிவு செய்து அசத்தியது. இந்த வெற்றியின் மூலம் தற்போது தொடர் சமன் ஆக உள்ளது.

இந்தியா vs இங்கிலாந்து:

இந்திய அணி 2வது போட்டியின் இரண்டாவது இன்னிங்ஸ் முடிவில் 286 ரன்னை குவித்து இங்கிலாந்து அணிக்கு 482 ரன்னை இலக்காக நிர்ணயித்தது. இந்நிலையில் இங்கிலாந்து அணி தனது இரண்டாவது இன்னிங்ஸை துவக்கியது. இந்த போட்டி இங்கிலாந்து அணிக்கு சிறப்பாக அமையவில்லை என்று தான் சொல்ல வேண்டும். முதல் இன்னிங்ஸை போலவே அனைத்து பேட்ஸ்மேகளும் இரண்டாவது இன்னிங்சில் சொற்ப ரன்னில் வெளியேறினர்.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

துவக்க ஆட்டக்காரர்கள் சிப்லே 3, பர்ன்ஸ் 25. லாரன்ஸ் 26, லீச் 0, ரூட் 33, ஸ்டோக்ஸ் 8, போப் 12, ஃபொக்ஸ் 2, ஸ்டோன் 0 என அனைத்து வீரர்களும் சொற்ப ரன்னில் வெளியேறி ஆட்டமிழந்தனர். இங்கிலாந்து அணியின் அலி மட்டும் அதிகபட்சமாக 43 ரன்னை அடித்து ஆட்டமிழந்தார். இந்த போட்டியில் இந்திய அணியின் செயல்பாடு மிகவும் சிறப்பாக இருந்தது. பேட்டிங்கில் இந்திய அணி சொதப்பினாலும் பௌலிங் மற்றும் பீலடிங் இரண்டிலும் இந்திய அணி மிக சிறப்பாக செயல்பட்டது.

மாஸ்டர் போஸ்டரில் அஸ்வின் புகைப்படம் – யாரு பாத்த வேல இது??

தற்போது 2வது இன்னிங்ஸ் முடிவில் இங்கிலாந்து அணி 164 ரன்னுக்கு ஆட்டமிழந்தது. இதன்மூலம் இந்திய அணி தனது 2வது டெஸ்ட் போட்டியில் 317 ரன்கள் வித்தியாசத்தில் தனது அசத்தலான வெற்றியை பதிவு செய்து அசத்தியது. இந்திய அணி தரப்பில் அக்சர் படேல் அதிகபட்சமாக 5 விக்கெட்டை வீழ்த்தியுள்ளார். இந்த வெற்றியின் மூலம் இந்திய அணி இந்த தொடரை 1-1 என்ற கணக்கில் சமன் செய்தது. இந்த அணிகளுக்கான 3வது டெஸ்ட் போட்டி வரும் 24ம் தேதி அகமதாபாத்தில் வைத்து நடைபெறவுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here