பாண்டியன் ஸ்டோர்ஸ் & பாக்கியலட்சுமி தொடரில் பிரபலங்கள் மாற்றம் – ஷாக் நியூஸ் இதோ!

0

விஜய் தொலைக்காட்சியில் சீரியலுக்கும், ரியாலிட்டி ஷோக்களுக்கும் பஞ்சமே இல்லை. அந்த அளவுக்கு ரசிகர் பட்டாளங்கள் விஜய் டிவி சீரியல்களுக்கு இருக்கத்தான் செய்கிறார்கள். டாப் மோஸ்ட் சீரியல் லிஸ்டில் இருப்பது, இல்லத்தரசி பெண்கள் படும் கஷ்டங்களை விவரிக்கும் தொடரான பாக்கியலட்சுமி சீரியலும், சொந்த குடும்பத்துக்கு சூனியம் வைக்க சொந்தங்களே போதும் என்ற உண்மை கருத்தை வெளிக்கொணரும் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலும் தான். இதுல என்ன புது ட்விஸ்டுன்னு யோசிக்குறீங்களா? தொடர்ந்து படிங்க.

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

சீரியலை பொறுத்தமட்டில் கதைக்களமும், அதில் நடிக்கும் கதாபாத்திரங்களும் தான் ரசிகர் மனங்களை கொள்ளை கொள்ளும் ஒளிவிளக்காக அமையும். இந்த சிறப்பம்சம் நம்ம பாண்டியன் ஸ்டோர்ஸ் குடும்ப தொடரிலும், பாக்கியலட்சுமி சீரியலிலும் இருக்கிறதால தான் மவுசு அதிகம். ஆனால் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் கடந்த சில நாட்களா கதையை ஜவ்வா இழுக்குறமாதிரி தான் காட்சிகள் இடம்பெறுகிறது. அதே சமயம் அப்போப்போ மீனா கொஞ்சம் எரியுற நெருப்புல எண்ணெய ஊத்துற மாதிரி சில காரியங்கள் செய்யுறதால பேலன்ஸ் ஆகுது.

ஆனால், பாக்கியலட்சுமி சீரியல்ல அப்டி கிடையாது. நாளுக்கு நாள் ட்விஸ்டுக்கு குறையே கிடையாது. வேற லெவல் அதிரடி திருப்பங்களை கொடுத்து பார்வையாளர்கள் எண்ணிக்கையை அதிகரிக்க செய்கிறது. இந்த நிலையில் இரண்டு சீரியல்களிலும் ஒரு முக்கிய நபரின் மாற்றம் நடந்துள்ளது. அட ஆமாங்க! ரெண்டு சீரியலிலும் கதை எழுதும் நபர் மாறியுள்ளனர். அதாவது, பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடருக்கு இனி சரவணன் என்பவரும், பாக்கியலட்சுமி தொடருக்கு பாரதி தம்பி என்பவரும் தான் இனி வசனம் எழுத இருக்கிறார்களாம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here