தற்போதைய டிஜிட்டல் உலகத்தில் மக்களை நூதனமான முறையில் பண மோசடி செய்து வருகின்றனர். சொல்லபோனால் ஆன்லைன் மூலமாக மக்களுக்கு வேலை வாய்ப்பு வாங்கி தருவதாக கூறி ஏழைகளை குறிவைத்து பணம் பறித்து வருவதாக புகார்கள் எழுந்த வண்ணம் இருக்கிறது.
Enewz Tamil WhatsApp Channel
அந்த வகையில் கடந்த 6 மாதங்களில் ஆன்லைன் வேலைவாய்ப்பு மோசடி தொடர்பாக கிட்டத்தட்ட 30 வழக்குகள் பதிவாகி இருப்பதாக சைபர் கிரைம் போலீஸ் தெரிவித்துள்ளது. மேலும் இனிமேல் ஆன்லைன் மூலமாக வேலை வாய்ப்பு வந்தால் உஷாராக இருக்க வேண்டும் என்றும், இணையதள வாயிலாக பெறும் சலுகைகள் குறித்து எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என காவல்துறை தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் புதுசா வீடு வாங்க போறீங்களா? உங்களுக்காகவே சிறந்த ஆஃபரை வெளியிட்ட வீட்டு வசதி வாரியம்!!!