தமிழகத்தில் சென்னை, மதுரை, திருச்சி உள்ளிட்ட பல்வேறு நகரங்களின் வளர்ச்சி பணிகளுக்காக வீட்டு வரி, குடிநீர் வரிகளை வீட்டு வசதி வாரியம் ஆண்டுக்கு இருமுறை வசூல் செய்து வருகிறது. ஆனால் ஒரு சில வீட்டு உரிமையாளர்கள் உரிய வரிகளை செலுத்தாமல் வருடக்கணக்கில் தாமதப்படுத்தி வருவதால், அவர்களின் வீடுகளை ஜப்தி செய்யும் நடவடிக்கையில் வீட்டு வசதி வாரியம் ஈடுபட்டு வருகிறது. இந்த நிலையில் ஜப்தி செய்த வீடுகளை, “வீடுகள் விற்பனை” என குடியிருப்பு திட்டத்தின் மூலம் விற்க உள்ளதாக மற்றொரு அதிரடி அறிவிப்பை வெளியிட்டுள்ளனர்.
Enewz Tamil WhatsApp Channel
இப்போதைக்கு சென்னை, மதுரை, கோவை ஆகிய நகரங்களில், முதலில் வருபவர்களுக்கு முன்னுரிமை என்ற அடிப்படையில் வீடு, மனை விற்பனை செய்யப்பட்டு வருவதாக கூறப்படுகிறது. இந்த அறிவிப்பு பொதுமக்கள் உள்ளிட்ட பலர் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.
சென்னையில் விநாயகர் சிலை ஊர்வலம்.., 5 ஆயிரம் சிலைகள் கடலில் கரைப்பு – வெளியான முக்கிய அறிவிப்பு!!