பொது விநியோகத் திட்டத்தின் கீழ், இந்திய அரசானது ஏழை எளிய குடும்ப அட்டைதாரர்களுக்கு மானிய விலையில் ரேஷன் பொருட்களை வழங்கி வருகிறது. இந்த ரேஷன் கார்டுகளில் பிற்படுத்தப்பட்டோர், நடுத்தரமானவர் என பல வகைகளாக பிரிக்கப்பட்டுள்ளது. இதன்படி முன்னுரிமை குடும்ப (PHH) அட்டைதாரர்களுக்கு குடும்பத்தில் உள்ள ஒரு நபருக்கு வீதம் மாதம் 5 கிலோ உணவு தானியங்கள் அரசு வழங்கி வருகிறது.
Enewz Tamil WhatsApp Channel
இந்த முன்னுரிமை ரேஷன் அட்டையை பெற விரும்புவோருக்கு கேரள அரசு அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதாவது, வரும் அக்டோபர் 10 முதல் 20 ஆம் தேதி வரை முன்னுரிமை ரேஷன் கார்டுகளுக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக, பொது விநியோகத் துறை அமைச்சர் ஜி.ஆர்.அனில் தெரிவித்துள்ளார். இவர், அமைச்சராக பொறுப்பேற்ற பிறகு இதுவரை, 3,22,952 சாதாரண குடும்ப அட்டைகளை முன்னுரிமை அட்டைகளாக மாற்றி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
தமிழகத்தில் புதுசா வீடு வாங்க போறீங்களா? உங்களுக்காகவே சிறந்த ஆஃபரை வெளியிட்ட வீட்டு வசதி வாரியம்!!!