தகுதிச்சுற்று போட்டிகளில் செலக்ட் ஆனவங்க 2021 ஒலிம்பிக் போட்டியில் நேரடியாக பங்கேற்கலாம் – ஒலிம்பிக் கமிட்டி முடிவு..!

0

ஒலிம்பிக் போட்டிகளுக்கென சர்வதேச அளவில் பல நாடுகளில் 57 சதவிகிதம் தகுதிச்சுற்று போட்டிகள் நடத்தி முடிக்கப்பட்டுள்ளன. இந்த தகுதிச்சுற்று போட்டிகளில் தேர்வானவர்கள் அடுத்த ஆண்டிற்குள் நடைபெறவுள்ள ஒலிம்பிக் போட்டிகளில் நேரடியாக பங்கேற்கலாம் என்று ஒலிம்பிக் கமிட்டி தெரிவித்துள்ளது.

கொரோனாவால் – சர்வதேச போட்டிகள் ரத்து..!

கொரோனா வைரஸ் காரணமாக சர்வதேச அளவில் அனைத்து விளையாட்டு போட்டிகளும் ரத்து அல்லது ஒத்தி வைக்கப்பட்டுள்ளன. இந்நிலையில் இந்த ஆண்டு டோக்கியோவில் வரும் ஜூலை 24ம் தேதி துவங்கவிருந்த ஒலிம்பிக் போட்டி அடுத்த ஆண்டு தள்ளி வைக்கப்பட்டுள்ளது.

ஒலிம்பிக் கமிட்டி முடிவு..!

ஒலிம்பிக் போட்டிகளில் 11,000 வீரர்கள் மற்றும் வீராங்கனைகள் பங்கேற்கவிருந்த நிலையில் அதில் 57 % வீரர்களின் தகுதிச்சுற்று ஏற்கனவே முடிந்துவிட்டது.

இந்நிலையில் அவர்கள் அனைவரும் மீண்டும் தகுதிப்போட்டியில் பங்கேற்காமல் நேரடியாக அடுத்த ஆண்டிற்குள் நடத்தப்பட உள்ள ஒலிம்பிக் போட்டிகளில் பங்கேற்கலாம் என்றும் எஞ்சியுள்ள தகுதிச்சுற்று போட்டிகளை நடத்த 3 மாதங்கள் ஆகும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

To Subscribe Youtube Channel Click Here
To Join WhatsApp Group Click Here
To Join Telegram ChannelClick Here

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here