கொரோனா வைரஸ் பாதிப்பால் மொபைல் டேட்டாவை பயன்படுத்துவோர்கள் எண்ணிக்கை அதிகரித்துள்ளதால் இணைய வேகம் குறைய வாய்ப்புள்ளது. எனவே மொபைல் டேட்டாவை சிக்கனமாக பயன்படுத்துங்கள் என செல்போன் நிறுவனங்களின் கூட்டமைப்பு கேட்டுக்கொண்டுள்ளது.
கொரோனாவால் அனைத்து சேவைகளும் முடக்கம்..!
கொரோனா வைரஸ் தாக்கத்தால் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே செல்கிறது. இந்தியாவை பொறுத்தவரை கொரோனா வைரஸ் தாக்கத்தால் இதுவரை 20 பேர் பலியாகியுள்ளனர். 900 க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் அத்தியாவசிய தேவைகளை தவிர்த்து மற்ற அனைத்து சேவைகளும் முடங்கியுள்ளன.
மொபைல் டேட்டாவை சிக்கனமாக பயன்படுத்தவும்..!
செல்போன் நிறுவங்களின் கூட்டமைப்பு இயக்குனர் ராஜன் மேத்யூஸ் கூறும்போது, கடந்த சில நாட்களாக நாடெங்கும் டேட்டா பயன்படுத்துவோர் எண்ணிக்கை 20 சதவீதம் முதல் 30 சதவீதம் வரை அதிகரித்துள்ளது. அதனால் செல்போன் நிறுவனகளுக்கு தொழில்நுட்ப ரீதியான சுமை அதிகரித்துள்ளது.இதனால் இணைய வேகம் குறைந்துள்ளது.
இதன் விளைவாக வீட்டிலிருந்தே வேலை, ஆன்லைன் கல்வி,பணப்பட்டுவாடா மற்றும் ஆன்லைன் மருத்துவ சேவை போன்ற முக்கிய சேவைகள் பாதிக்கப்பட வாய்ப்பிருக்கிறது. எனவே மொபைல்போனை பயன்படுத்துபவர்கள் மொபைல் டேட்டாவை சிக்கனமாக பயன்படுத்துமாறு செல்போன் நிறுவங்களின் கூட்டமைப்பு கேட்டுக்கொண்டுள்ளது.
To Subscribe Youtube Channel | Click Here |
To Join WhatsApp Group | Click Here |
To Join Telegram Channel | Click Here |