மக்கள் தொகை கணக்கெடுப்பு (என்.பி.ஆர்) பணிகள் ஒத்திவைப்பு..? மத்திய அரசு யோசனை..!

0

இந்தியாவில் கொரோனா வைரஸின் தாக்கம் தீவிரமடைந்து உள்ள நிலையில் மக்கள் தொகை கணக்கெடுப்பு பணிகளை நிறுத்திவைக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

என்.பி.ஆர் பணிகள்:

இந்தியாவில் வரும் ஏப்ரல் 1 முதல் மக்கள் தொகை கணக்கெடுப்பு பணிகள் தொடங்கும் என மத்திய அரசு அறிவித்து இருந்தது. இந்நிலையில் கொரோனா வைரஸ் பரவலின் காரணமாக பல மாநிலங்கள் முடங்கி உள்ளன. இதனால் மக்கள் தொகை கணக்கெடுப்பின் முதற்கட்ட பணிகளை ஒத்திவைக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

கழிவறை முதல் கம்ப்யூட்டர் வரை..! மக்கள்தொகை கணக்கெடுப்பில் கேட்கப்படவுள்ள 31 கேள்விகள் இதோ..!

இதற்கான தீவிர ஆலோசனையில் அதிகாரிகள் ஈடுபட்டு வருகின்றனர். இது குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

To Subscribe Youtube Channel Click Here
To Join WhatsApp Group Click Here
To Join Telegram ChannelClick Here

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here