இந்தியாவில் 10 ஆண்டுக்கு ஒருமுறை எடுக்கப்படும் மக்கள்தொகை கணக்கெடுப்பில் இந்த வருடம் கேட்கப்படவுள்ள கேள்விகளின் விபரத்தை மத்திய பதிவாளர் அலுவலகம் வெளியிட்டுள்ளது.
2021ம் ஆண்டுக்கான தொடக்க பணிகள்..!
இந்தியாவில் 2021ம் ஆண்டு மக்கள்தொகை கணக்கெடுப்பு (சென்சஸ்) நடக்கவுள்ளது. இதற்கான தொடக்கப்பணிகள் தற்போது தொடங்கி உள்ளன. மத்திய பதிவாளர் ஜெனரல் அலுவலகம் இதற்கான பணிகளை மேற்கொள்ள உள்ளது. இரு கட்டங்களாக நடைபெற்ற உள்ள கணக்கெடுப்பு பணிகளில் கேட்கப்படும் கேள்விகளின் பட்டியல் வெளியிடப்பட்டு உள்ளது.
கேட்கப்பட உள்ள 31 கேள்விகளின் விபரம்:
- வீட்டு எண்
- மக்கள் தொகை கணக்கெடுப்பு அமைப்பு வழங்கிய வீட்டு எண்
- வீட்டின் தரை, சுவர், கூரைக்கு பயன்படுத்திய கட்டுமான பொருட்கள்
- கணக்கெடுப்பு நடத்தப்படும் வீட்டின் பயன்பாடு
- வீட்டின் தற்போதைய நிலவரம்
- வீட்டில் உள்ள உறுப்பினர்களின் எண்ணிக்கை
- தற்போது வீட்டில் வசிப்பவர்களின் எண்ணிக்கை
- குடும்ப தலைவரின் பெயர்
- குடும்ப தலைவரின் பாலினம்
- குடும்ப தலைவர் தாழ்த்தப்பட்டவரா? பழங்குடியினரா? வேறு பிரிவினரா?
- வீட்டின் உரிமையாளர் விவரம்
- வீட்டில் உள்ள அறைகளின் எண்ணிக்கை
- வீட்டில் வசிக்கும் திருமணமான நபர்கள்
- குடிநீர் கிடைக்கும் வழிகள்.
- எவ்வளவு குடிநீர் கிடைக்கிறது?
- விளக்கு வசதி கிடைக்கும் விவரம்?
- கழிவறை உள்ளதா?
- எந்த வகை கழிவறை?
- மற்ற வகை தண்ணீர் தேவை எப்படி கிடைக்கிறது?
- குளியலறை வசதி உள்ளதா?
- சமையல் அறைக்கு எரிவாயு இணைப்பு உள்ளதா?
- சமையலுக்கு பயன்படுத்தும் எரிபொருள்
- ரேடியோ, டிரான்ஸ்சிஸ்டர் உள்ளதா?
- டெலிவிஷன் இருக்கிறதா?
- இன்டர்நெட் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளதா?
- லேப்டாப், கம்ப்யூட்டர் இருக்கிறதா?
- டெலிபோன், மொபைல், போன், ஸ்மார்ட்போன் உள்ளதா?
- சைக்கிள், ஸ்கூட்டர், மொபட், மோட்டார் சைக்கிள் இருக்கிறதா?
- கார், ஜீப், வேன் உள்ளதா?
- வீட்டில் சாப்பிடும் முக்கிய உணவு தானியம்
- மொபைல் போன் எண் போன்ற 31 வகையான கேள்விகள் கேட்கப்பட உள்ளன.
To Subscribe Youtube Channel | Click Here |
To Join WhatsApp Group | Click Here |
To Join Telegram Channel | Click Here |