கொரோனா வைரஸ் எதிரொலி – மின் கட்டணம் செலுத்த சலுகை..!

0

கொரோனா வைரஸ் தாக்கத்தால் இம்மாதம் மின் கட்டணம் செலுத்த வேண்டியவர்கள், முந்தைய மின் கட்டணத்தையே செலுத்தும் படி மின் வாரியம் அறிவித்து உள்ளது..

மின் ஊழியர்கள் கோரிக்கை..!

கொரோனா வைரஸ் தாக்கத்தால் மின் பயன்பாடு கணக்கெடுக்கும் பணியில் ஈடுபடுத்த வேண்டாம் என ஊழியர்கள் மின் வாரியத்திற்கு கோரிக்கை விடுத்தனர். இதையடுத்து இம்மாதம் கட்டணம் செலுத்த வேண்டியவர்கள் முந்தைய மாத கட்டணத்தையே செலுத்துமாறு மின் வாரியம் அறிவுறுத்தி உள்ளது.

மின் வாரியம் அறிவிப்பு ..!

கொரோனா வைரஸ் தொற்று காரணமாக 2020 மார்ச் மாத பட்டியலுக்கு 22ம் தேதி முதல் 31ம் தேதி வரை ‘மீட்டர் ரீடிங்’ எடுக்க முடியாத நிலை ஏற்பட்டு உள்ளது. இதனால், ஜனவரி, பிப்ரவரி மாத கணக்கீட்டின்படி பணம் செலுத்த அறிவுறுத்தப்படுகிறது. இவ்வாறு செலுத்திய கட்டணம் பின்வரும் மாத கணக்கீட்டு மின் கட்டணத்தில் சரிசெய்யப்படும் என்று மின் வாரியம் தெரிவித்துள்ளது.

To Subscribe Youtube Channel Click Here
To Join WhatsApp Group Click Here
To Join Telegram ChannelClick Here

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here