தமிழகத்திற்கு வருகிற மே 31ம் தேதி வரை முதல்வர் அவர்களின் கோரிக்கையை ஏற்று பயணியர் ரயில் போக்குவரத்து கிடையாது என மத்திய அரசு அறிவித்து உள்ளது.
சென்னையில் கொரோனா:
தமிழகத்தில் சென்னை தான் கொரோனா வைரஸின் மையமாக உள்ளது. அங்கு பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே வருவதால், நோய்த்தொற்றை கட்டுப்படுத்தும் வரை வழக்கமாக இயக்கப்படும் பயணியர் ரயில் சேவையை தொடங்க வேண்டாம் என மத்திய அரசுக்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி அவர்கள் கடிதம் எழுதினார். மேலும் 2 சிறப்பு ரயில்கள் மூலம் சென்னைக்கு வரும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட பயணிகளை தனிமைப்படுத்தி பரிசோதனை மேற்கொள்ளவும் உத்தரவு பிறப்பித்து உள்ளார்.
நேற்று பிரதமர் மோடி அவர்களுடன் நடைபெற்ற ஆலோசனையில் வரும் 31ம் தேதி வரை தமிழகத்திற்கு ரயில்களை இயக்க வேண்டாம் என கோரிக்கை வைக்கப்பட்டது. ஆனால் சிறப்பு ரயில்கள் முன்பதிவு முடிந்து விட்ட காரணத்தால் வரும் 14 மற்றும் 15ம் தேதி மட்டும் இரண்டு ரயில்கள் சென்னைக்கு இயக்கப்படுகிறது. இவ்விரு பயணியர் ரயில்களை தவிர வேறு எந்த ரயில்களும் தமிழகத்திற்கு இயக்கப்படாது என மத்திய அரசு அறிவித்து உள்ளது.
To Subscribe Youtube Channel | Click Here |
To Join WhatsApp Group | Click Here |
To Join Telegram Channel | Click Here |