20 லட்சம் கோடிக்கு சலுகை திட்டங்கள் – இன்று அறிவிக்கும் நிர்மலா சீதாராமன்..!

0

பிரதமர் நரேந்திர மோடி நேற்று அறிவித்த 20 லட்சம் கோடி ரூபாய் மதிப்புள்ள திட்டங்கள் குறித்த முழு விபரங்களை இன்று மாலை மத்திய நிதியமமைச்சர் நிர்மலா சீதாராமன் வெளியிட உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

தொழில்துறையை மீட்டெடுக்க:

பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் நேற்று 5வது முறையாக நாட்டு மக்களுக்கு உரையாற்றினார். அதில் நான்காம் கட்ட ஊரடங்கு இருக்கும் எனவும் அதற்கான விதிமுறைகள் மே 18ம் தேதிக்கு முன்னர் வெளியிடப்படும் என தெரிவித்தார். மேலும் கொரோனவால் பாதிக்கப்பட்டு உள்ள பொருளாதாரத்தை மீட்டெடுக்கும் வகையில் 20 லட்சம் கோடி ரூபாய் அளவிற்கு திட்டங்கள் அறிவிக்கப்படும் என்றார். இதில் சிறு, குறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள் அதிகளவில் பயன்பெறும் வகையில் திட்டங்கள் இடம்பெறும் என கூறப்படுகிறது.

இந்நிலையில் பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் அறிவித்த 20 லட்சம் கோடி மதிப்புள்ள திட்டங்கள் யார் யாருக்கு சென்றடையும் உள்ளிட்ட முழு விபரங்களை இன்று மாலை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவிக்க உள்ளார். அதில் சிறு, குறு நிறுவனங்களுக்கு அதிகளவில் கடன், முத்ரா திட்டத்தின் கீழ் கூடுதல் கடன் உள்ளிட்டவை அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

To Subscribe Youtube Channel Click Here
To Join WhatsApp Group Click Here
To Join Telegram ChannelClick Here

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here