சீனாவை தொடர்ந்து இந்தியாவில் பல இடங்களில் உருமாறிய BF7 கொரோனா வைரஸின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே வருகிறது. இதை தடுக்க பல முன்னெச்சரிக்கை ஏற்பாடுகளை மத்திய மற்றும் மாநில அரசு மேற்கொண்டு வருகிறது.
டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்
மேலும் புதுச்சேரி மாநிலத்திலும் கொரோனவை தடுக்க பல முன்னெச்சரிக்கை ஏற்பாடுகளை அறிவித்து வருகின்றனர். அந்த வகையில் அனைவரும் முகக்கவசம் அணிந்திருக்க வேண்டும், கட்டாயம் தடுப்பூசி போடாதவர்கள் போட வேண்டும் என கூறியுள்ளனர்.
இப்படி இருக்கையில் புதுச்சேரி சுகாதாரத்துறை அமைச்சர் ஸ்ரீ.ராமுலு, இதுவரை 21 பேர் கொரோனா வைரஸால் பாதிப்பு அடைந்துள்ளனர். அதில் 20 நபர்கள் வீடுகளிலும் , 1 நபர் மருத்துவமனைகளிலும் சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும் உருமாறிய BF7 கொரோனா வைரஸ் பாதிப்பு புதுச்சேரியில் இல்லை எனவும் அவர் கூறியுள்ளார்.