ஆதார் கார்டில், நிரந்தர முகவரி இல்லாமல் சிரமப்பட்ட நபர்களுக்கு, மகிழ்ச்சி அளிக்கும் விதமாக சூப்பர் அப்டேட் ஒன்றை ஆதார் அடையாள ஆணையம், வெளியிட்டுள்ளது.
ஆதார் அப்டேட் :
நாடு முழுவதும் உள்ள பொதுமக்களுக்கு, ஆதார் கார்டு கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இந்த ஆதார் கார்டில் கொடுக்கப்பட்டுள்ள 12 இலக்க தனித்துவமிக்க எண், அரசின் அனைத்து நலத்திட்டங்களில் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், சொந்தப் பெயரில் ஆதார் ஆவணங்கள் இல்லாத பெற்றோர், குழந்தைகள் உள்ளிட்ட பயனர்களுக்கு குட் நியூஸ் அளிக்கும் விதமாக சூப்பர் அப்டேட் ஒன்றை இந்திய ஆதார் தனித்துவ அடையாள ஆணையம்(UIDAI) வெளியிட்டுள்ளது.
டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்
குடும்பத் தலைவரின் ஒப்புதலுடன், ஆதாரில் உள்ள முகவரியை புதுப்பிக்க, குடியுரிமை நட்பு வசதி என்ற அப்டேட்டை ஆதார் ஆணையம் வழங்கியுள்ளது. இந்த முகவரி அப்டேட்டை செய்ய விரும்பும் பயனர்கள், தங்கள் உறவினரின் ஆதார் எண்ணை உள்ளீடு செய்து, இதற்காக விண்ணப்பிக்க வேண்டும். பயனர்களின் இந்த விண்ணப்பத்தை சம்பந்தப்பட்ட உறவினர் ஏற்றுக்கொண்டு, அவருக்கான உறவு சான்று ஆவணத்தை பதிவேற்ற வேண்டும். அதன் பிறகு இதற்கான கட்டணத்தையும் இணையத்தில் செலுத்த வேண்டும்.
“உருமாறிய BF7 கொரோனாவால் எந்த பாதிப்பு இல்லை” .., சுகாதாரத்துரை அமைச்சர் திட்டவட்டம்!!
இது குறித்து சம்பந்தப்பட்டவருக்கு குறுந்தகவல் அனுப்பப்பட்டு அவரிடம் இதுகுறித்து கோரிக்கை கேட்கப்படும். அவர் ஒப்புதல் வழங்கினால் மட்டுமே, இந்த முகவரி புதுப்பிப்பு அப்டேட் செய்யப்படும். ஒருவேளை அவர் இதை ஏற்றுக்கொள்ளவில்லை என்றால் விண்ணப்பம் நிராகரிக்க படுவதுடன், கட்டிய தொகையும் உங்களுக்கு திருப்பி செலுத்தப்படாது. இதை பயனர்கள் முழுவதுமாக தெரிந்து கொண்டு விண்ணப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.