நீலகிரி மலை ரயில் முதல் சென்னை ரங்கநாதன் கடைகள் வரை அனைத்தும் க்ளோஸ் – கொரோனா நடவடிக்கைகள் தீவிரம்..!

0

கொரோனா தொற்றின் காரணமாக மக்கள் அதிகம் கூடும் இடங்கள் மற்றும் வளாகங்கள் மூடப்பட்டு வருகின்றனர். இதையடுத்து சென்னையின் ரங்கநாதன் தெருவில் உள்ள அனைத்து கடைகளும் மூடப்பட்டுள்ளன. மேலும் இன்று (18.3.2020) முதல் 31.03.20 வரை மேட்டுப்பாளையம் – ஊட்டி இடையே இயக்கப்பட்டுவந்த நீலகிரி மலை ரயில் சேவை அனைத்தும் ரத்து செய்யப்பட்டுள்ளது.

கொரோனா தொற்று..!

கொரோனா தொற்று இந்தியாவிலும் அதிகமாக பரவி வருவதால் பல முன்னெச்சரிக்கை நடவடிக்கையை தமிழக அரசு மேற்கொண்டுள்ளது. இதனால் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அளித்திருந்தது. அதனை தொடர்ந்து மேட்டுப்பாளையம் – ஊட்டி இடையே இயக்கப்பட்டு வந்த நீலகிரி மலை ரயில் சேவை அனைத்தும் ரத்து செய்யப்பட்டுள்ளது. ஏனெனில் சுற்றுலா தளமான ஊட்டி மக்கள் அதிகம் கூடும் இடமாகும். மேலும் குளிரின் மூலம் கொரோனா வேகமாக பரவும். எனவே அதனை தடை செய்துள்ளது.

சென்னையில் முன்னெச்சரிக்கை..!

மேலும் சென்னையில் உள்ள ரங்கநாதன் மற்றும் தியாகராய தெருவில் உள்ள அனைத்து கடைகளும் மூடப்பட்டுள்ளன. சென்னை மக்கள் தொகை அதிகம் இருக்கும் ஒரு மாவட்டம் ஆகும். சென்னையில் முக்கிய இடங்களில் கூட்டம் எப்பொழுதும் அலைமோதும். எப்பொழுதும் திருவிழா கூட்டம் போலவே காணப்படும் சென்னையில் ரங்கநாதன் தெருவிலும் அனைத்து கடைகளும் மூடப்பட்டு உள்ளன.

To Subscribe Youtube Channel Click Here
To Join WhatsApp Group Click Here
To Join Telegram ChannelClick Here

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here