தமிழகத்தில் கடந்த மாதத்தில் இருந்தே வெயிலின் தாக்கம் வழக்கத்திற்கு மாறாக அதிகமாக இருந்து வருகிறது. இதனால் மக்கள் வெளிய வரவே பயப்படுகிறார்கள். இருப்பினும் வைப்பதை தணிக்கும் விதமாக ஆங்காங்கே இருக்கும் சில முக்கிய இடங்களில் மிதமான மழை பெய்து வருகிறது. அந்த வகையில் அடுத்த மூன்று மணி நேரத்தில் 5 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை மையம் ஒரு அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்
இது தொடர்பாக வெளியான அறிக்கையில் கூறியிருப்பதாவது, வளிமண்டல கீழடுக்கு சுழற்சி மற்றும் வெப்ப சலனம் காரணமாக முக்கியமான பல இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்து வருகிறது. அதன்படி கோவை, திண்டுக்கல், நீலகிரி, ஈரோடு மற்றும் திருப்பூர் உள்ளிட்ட ஐந்து மாவட்டங்களில் அடுத்த மூன்று மணி நேரத்தில் மிதமான மழை பெய்ய இருப்பதாக சென்னை வானிலை மையம் அறிவித்துள்ளது.