தமிழகத்தில் தென்மேற்கு பருவமழை ஆரம்பித்ததில் இருந்து சில முக்கிய பகுதிகளில் கனமழை வெளுத்து வாங்கி வருகிறது. குறிப்பாக வட மாநிலங்களில் தொடர்ந்து விடாமல் மழை பெய்து வருவதால் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு மக்கள் கடும் அவதிக்கு ஆளாகியுள்ளனர். இந்நிலையில் அடுத்த மூன்று மணி நேரத்தில் மழை பெய்யும் மாவட்டங்கள் குறித்து சென்னை வானிலை மையம் ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளது.
இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்
அதன்படி விழுப்புரம், வேலூர், காஞ்சிபுரம், நீலகிரி, கோவை, திருவள்ளூர், கிருஷ்ணகிரி, தர்மபுரி, சென்னை, செங்கல்பட்டு, திருப்பத்தூர், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை ஆகிய மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்தில் மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.