சென்னை நேரு உள் விளையாட்டரங்கில் நேற்று முதலமைச்சர் கோப்பை என்ற விழா சீறும் சிறப்புமாக நடைபெற்றது. இந்த விழாவில் முதல்வர் முக ஸ்டாலின், விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்
மேலும் இந்த விழாவில், முதலமைச்சர் கோப்பையில் முதல் மூன்று இடங்களை பிடித்த சென்னை, செங்கல்பட்டு, கோவை உள்ளிட்ட மாவட்டங்களுக்கு முதல்வர் முக ஸ்டாலின் வெற்றி கோப்பைகளை வழங்கினார். இதனை தொடர்ந்து பேசிய முதல்வர், விளையாட்டு வீரர்கள் மட்டும் வெற்றிக்காக போராடவில்லை நாங்களும் இந்தியாவின் வெற்றிக்காக தான் போராடி வருகிறோம். எங்கள் அணியும் இந்தியா தான் என்று குறிப்பிட்டார். எங்கள் அணியில் அனைவரும் ஒன்றிணைந்து இந்தியாவில் வெற்றிக்காக பாடுபட்டு வருகிறோம் என பேசினார்.