தமிழகத்தில் கடந்த மாதத்தில் இருந்து வெப்பம் அதிகமாக கொளுத்திய நிலையில் தற்போது குளிரூட்டும் விதமாக ஆங்காங்கே கனமழை பெய்து வருகிறது. இதனால் மக்கள் சந்தோஷத்தில் இருந்து வருகின்றனர். இருப்பினும் சில மாவட்டங்களில் கனமழை தொடர்ந்து பெய்து வருவதால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.
இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்
இந்நிலையில் அடுத்த மூன்று மணி நேரத்தில் மழை பெய்யும் 16 மாவட்டங்கள் குறித்து சென்னை வானிலை மையம் அறிக்கை வெளியிட்டுள்ளது. இது தொடர்பாக வெளியான அறிக்கையில் கூறியிருப்பதாவது, தமிழகத்தின் முக்கிய மாவட்டங்களான மதுரை, திண்டுக்கல், தர்மபுரி, கடலூர், புதுக்கோட்டை.
தமிழகத்தில் நாளை முதல் ஜூலை 11 வரை கனமழைக்கு வாய்ப்பு – சென்னை வானிலை மையம் அறிவிப்பு!!
அது போக பெரம்பலூர், அரியலூர், ராமநாதபுரம், கோவை, தேனி, ஈரோடு, சேலம், சிவகங்கை, நீலகிரி ஆகிய மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்றும், திருவள்ளூர் மற்றும் சென்னை மாவட்டங்களில் லேசான மழைக்கு வாய்ப்புள்ளதாகவும் தெரிவித்திருக்கிறது.