நாடு முழுவதும் முதியவர்கள், பெண்கள் உள்ளிட்ட பலரும் உள்ளூர் மற்றும் வெளியூர் பயணங்களுக்கு ரயில் பயணங்களையே பெரிதும் விரும்புகின்றனர். இதற்கேற்ப புறநகர், எக்ஸ்பிரஸ், மெட்ரோ என பல ரயில் சேவைகளை ரயில்வே நிர்வாகம் வழங்கி வருகிறது.
இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்
ஆனால் மற்ற ரயில்களை விட வந்தே பாரத் ரயில்களில் கட்டணம் அதிகமாக இருப்பதால் பயணிகளின் எண்ணிக்கை குறைந்து வருவதாக கூறப்படுகிறது. அதேபோல் மற்ற ரயில்களில் எக்சிகியூடிவ் கோச், A/C கோச்களிலும் பயணிகள் எண்ணிக்கை வரத்து குறைந்து உள்ளதாகவும் தகவல் தெரிவித்துள்ளனர்.
இதன் காரணமாக கடந்த 30 நாட்களில் 50 சதவீத அளவுக்கு பயணிகள் வரத்து குறைந்த வந்தே பாரத் உள்ளிட்ட மற்ற ரயில் கோச்களின் விவரங்களை சேகரிக்க உள்ளனர். இதில் 25 சதவீதம் வரை கட்டணத்தை குறைக்க உள்ளதாகவும் கூறப்படுகிறது. இது தொடர்பாக ரயில்வே நிர்வாகம் அதிகாரபூர்வ அறிவிப்பை விரைவில் வெளியிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.