நாடு முழுவதும் இளநிலை மருத்துவ படிப்புக்கான நீட் நுழைவு தேர்வு கடந்த மே மாதம் நடைபெற்றது. இதன் முடிவுகள் ஜூன் 13ஆம் தேதி வெளியிடப்பட்டதில் 56.21 சதவீதம் பேர் தேர்ச்சி அடைந்தனர். தமிழகத்தை பொறுத்தவரை 54.55 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்று இருந்தனர்.
இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்
தேர்ச்சி பெற்றவர்களுக்கு மாநில அளவில் 85 சதவீதமும், அகில இந்திய அளவில் 15 சதவீதமும் மருத்துவ படிப்புக்கான இட ஒதுக்கீடு வழங்கப்படுகிறது. அந்த வகையில் தமிழகத்தில் மாநில அளவிலான எம்.பி.பி.எஸ் மற்றும் பி.டி.எஸ் மருத்துவ படிப்புக்கான கவுன்சிலிங்-க்கான விண்ணப்பங்கள் நாளை மறுநாள் (ஜூலை 10) வரை வழங்க இருப்பதாக தெரிவிக்கப்பட்டு இருந்தது. இந்த நிலையில் இதற்கான விண்ணப்பங்கள் ஜூலை 12ஆம் தேதி மாலை 5 மணி வரை விநியோகிக்கப்படும் என கால அவகாசத்தை நீட்டித்துள்ளனர்.