நிழல் உலக தாதா தாவூத் இப்ராஹிம் – கொரோனாவிற்கு பலியானதாக தகவல்..!

0
Dawood
Dawood

இந்தியாவால் தேடப்பட்டு வரும் பயங்கரவாதியும், நிழல் உலக தாதாவும் ஆன தாவூத் இப்ராஹிம் கொரோனா வைரஸ் பாதிப்பால் பாகிஸ்தானில் உயிரிழந்து விட்டதாக சமூக வலைதளங்களில் செய்திகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

பயங்கரவாதி தாவூத்:

இந்தியாவில் 1993ம் ஆண்டில் நடைபெற்ற பயங்கரவாத குண்டுவெடிப்பு சம்பவங்களில் முக்கிய புள்ளியாக செயல்பட்ட நிழல் உலக தாதா இந்திய அரசால் தேடப்படும் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டு உள்ளார். அவன் பாகிஸ்தான் கராச்சி பகுதியில் வசித்து வருவதாக இந்திய அரசு தொடர்ந்து கூறி வருகிறது. இதற்கான ஆதாரங்களை வழங்கிய பொழுதும் பாகிஸ்தான் எவ்வித நடவடிக்கைகளையும் எடுக்கவில்லை.

டெலிகிராம் இல் தகவல்களைப் பெற இங்கே கிளிக் செய்யவும்

காஷ்மீர் துப்பாக்கிச் சூட்டில் தமிழக ராணுவ வீரர் வீரமரணம் – ரூ.20 லட்சம் நிவாரணம்

மேலும் தங்கள் நாட்டில் தாவூத் இப்ராஹிம் இல்லை என தொடர்ந்து கூறி வருகிறது பாகிஸ்தான். இது தொடர்பாக பல்வேறு முக்கிய ஆதாரங்களை இந்திய அரசு அளித்து வந்தாலும், அதனை பாகிஸ்தான் தொடர்ந்து மறுத்து வருகிறது. பாகிஸ்தான் உளவுத்துறை ஐஎஸ்ஐ இவருக்கு தீவிரவாத செயல்களில் தொடர்ந்து ஆதரவு வழங்கி வருவதாக கூறப்படுகிறது. இந்நிலையில் தாவூத் இப்ராஹிம் மற்றும் அவனது மனைவிக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டு உள்ளதாக தகவல்கள் வெளியானது.

இதைத் தொடர்ந்து இருவரும் தனிமைப்படுத்தப்பட்டு ராணுவ மருத்துவமனையில் சிகிச்சைக்கு உட்படுத்தப்பட்டு உள்ளதாக தகவல்கள் தெரிவித்த நிலையில், அவர் சிகிச்சை பலனின்றி இன்று உயிரிழந்து விட்டதாக சமூக வலைதளங்களில் தகவல்கள் பரவி வருகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here