UPI பயனர்களே உஷார்.., விரைவில் பயன்பாட்டுக்கு வரும் புதிய விதி.., மத்திய அரசு அதிரடி!!!!

0
UPI பயனர்களே உஷார் விரைவில் பயன்பாட்டுக்கு வரும் புதிய விதி.
இந்தியாவில் தற்போது UPI மூலமாக மேற்கொள்ளப்படும் டிஜிட்டல் பரிவர்த்தனைகள் நாளுக்கு நாள் அதிகமாகி வருகிறது.UPI பரிவர்த்தனை மூலம் பல நன்மைகள் ஏற்பட்டாலும், ஆன்லைன் பண மோசடிகளும் அதிகரித்து வருகின்றன. இதனால் மோசடிகளை தடுக்க மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன.
அந்த வகையில் மத்திய அரசு இனி வரும் நாட்களில் இரண்டு நபர்களுக்கிடையேயான முதல் முறை பரிவர்த்தனை மேற்கொள்வதில் சில மாற்றங்களை கொண்டு வர இருப்பதாக தெரிவித்துள்ளனர். மேலும் குறிப்பிட்ட தொகைக்கு மேல் பரிவர்த்தனை செய்யும் போது குறைந்தபட்ச காலக்கெடுவை விதிக்க இருப்பதாகவும் கூறப்படுகிறது. இந்த மாற்றங்களை செய்வது குறித்து மத்திய அரசு ஆலோசித்து வருவதால் கூடிய விரைவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகலாம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here